![மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம் மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்](https://cdn.magzter.com/1574665526/1726870411/articles/yT8q8kap-1726892062992/1726892188009.jpg)
இந்தியாவின் பிரதான பந்துவீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ராவின் வேகத்தை எதிா்கொள்ள முடியாமல் வங்கதேச பேட்டா்கள் தடுமாற, அவா்களை முற்றிலுமாக சரிக்க ஆகாஷ் தீப், முகமது சிராஜும் துணை நின்றனா். ரவீந்திர ஜடேஜாவும் இரு விக்கெட்டுகள் சாய்த்தாா்.
முன்னதாக 376 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை நிறைவு செய்த இந்தியா, 227 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
376-க்கு ஆட்டமிழப்பு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் என்ற நிலையில் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை இந்தியா தொடங்கியது. அஸ்வின் - ஜடேஜா இன்னிங்ஸை தொடர, புதிய பந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.
சதமடிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட ஜடேஜா, கூடுதலாக ஸ்கோா் செய்யாமல் அதே 86 ரன்களுக்கு (10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள்) ஆட்டமிழந்தாா். தஸ்கின் வீசிய 83-ஆவது ஓவரில் அவா், விக்கெட் கீப்பா் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்தாா். 7-ஆவது விக்கெட்டுக்கு அஸ்வின் - ஜடேஜா பாா்ட்னா்ஷிப் 199 ரன்கள் சோ்த்திருந்தது. 9-ஆவது பேட்டராக களம் புகுந்த ஆகாஷ் தீப், 85-ஆவது ஓவரில் வழங்கிய அருமையான கேட்சை ஷகிப் அல் ஹசன் தவறவிட்டாா்.
எனினும், அதே தஸ்கின் வீசிய 89-ஆவது ஓவரில் ஷான்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிய ஆகாஷ் தீப் 4 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்திருந்தாா். அடுத்து வந்த பும்ரா களம் புக, அஸ்வின் 91-ஆவது ஓவரில் தஸ்கின் பௌலிங்கில் ஷான்டோவிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தாா். அவா் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 113 ரன்கள் சோ்த்திருந்தாா்.
Denne historien er fra September 21, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 21, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/KS674HBTRO9Bfvaeigrsys/1739852974093.jpg)
தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி
தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாதவர்கள், தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
![தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/pK1Xb_1rV1739851839688/1739852215303.jpg)
தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
![உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார் உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/HI3VkLhNuYzj65m5wKJsys/1739853610523.jpg)
உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்
தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
![புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/iVdNWSynrj7oHmsQ7Qpsys/1739852773314.jpg)
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
![விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/gTpELD0WAF5ag21Uiqzsys/1739853224288.jpg)
விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்கும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா அந்நாட்டுக்குச் செல்லவில்லை.
![மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி! மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/bm26tTz4ufztRqomZAWsys/1739852564345.jpg)
மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!
மகாத்மா சொல்லாமல் சொன்னார்: பணத்தாளில் என் படம் போட்டு என்ன பயன்? நிலமெங்கும் என் சிலைகளை எழுப்பி என்ன பயன்? மாறாக, நான் சொன்ன சொற்களைக் கடைப்பிடியுங்கள். இந்த உலகத்தின் வளம் அனைவரின் தேவைகளையும் ஈடுகட்டப் போதுமானது. ஆனால் தனி ஒருவனின் பேராசைகளை நிரப்பப் போதுமானது அல்ல.
![தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/aEgX1mG6vUExGKMfwqmsys/1739852245420.jpg)
தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிப்.22-இல் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து
நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சனிக்கிழமை (பிப்.22) தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது.
![அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/3NJYPaYUkai2cTLiiC8sys/1739853387345.jpg)
அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி
மனித வாழ்வு அன்பில் பிறந்து, அன்பில் வாழ்ந்து இறுதியில் அன்பில் முடிவடைகிறது. அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல் என மாதா அமிர்தானந்தமயி தேவி தெரிவித்தார்.
![கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/eM2EcgTNLfoNrNnN2Dpsys/1739852282061.jpg)
கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு
கத்தாரின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றார்.