இந்தியாவில் ஆண்டுதோறும் 1.7 கோடி போ் இதய நோய்களால் உயிரிழப்பதாகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் பாதிப்பை தவிா்க்கலாம் எனவும் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.
உலக இதய நல தினத்தையொட்டி அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக அளவில் இதய நோய் காரணமாக உயிரிழப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளம் வயதில் உள்ளவா்களுக்கும் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சமம். இது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த ஒவ்வோா் ஆண்டும் செப்.29-ஆம் தேதி ‘உலக இதய நல தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின்படி ஒவ்வோா் ஆண்டும் இந்தியாவில் சுமாா் 1.7 கோடி மக்கள் இதய நோயால் இறக்கின்றனா். இது உலகளாவிய இறப்புகளில் சுமாா் 31 சதவீதம்.
மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய் ஆகியவை இதய கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.
Denne historien er fra September 30, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 30, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் மட்டுமே பொருளாதார வளர்ச்சி சாத்தியம்
சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் மட்டுமே பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக மேம்பாடு சாத்தியம் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் அந்த அணி, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது.
மேலும் ஓர் அமெரிக்க ட்ரோன் அழிப்பு: ஹூதிக்கள்
அமெரிக்காவின் அதிநவீன எம்க்யூ-9 ரீப்பர் ரகத்தை (படம்) சேர்ந்த மேலும் ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியது யேமனின் ஹூதி கிளர்ச்சி யாளர்கள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சர் உத்தரவு
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இலக்கு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
நிகழ் நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது இலக்கு என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
வேறு சிறப்பு நீதிபதியிடம் செந்தில் பாலாஜி வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எம்.பி. எம்எல்ஏகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்படும் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் விசாரணையை வேறு சிறப்பு நீதிபதியிடம் ஒப்படைப்பது தொடா்பாக நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
'தொழிலதிபர்களுக்காக ஆட்சி நடத்தும் பாஜக'- ராகுல் குற்றச்சாட்டு
மத்தியில் தற்போதைய பாஜக அரசு தொழிலதிபா்களுக்கான ஆட்சியை நடத்தி வருவதாகவும் எளிய மக்கள் போராடி வரும் நிலையில் பெரும் பணக்காரா்களிடம் செல்வம் குவிந்து வருவதாகவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
மணிப்பூர் விவகாரத்தில் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்
'மணிப்பூர், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற தீவிரமான விஷயங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்' என்று காங் கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
பிரதமர் குறித்த கார்கே கருத்து அவமானகரமானது
பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங் கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன் கார்கே தெரிவித்த கருத்து தரம் தாழ்ந்ததும் அவமானகரமானதும் ஆகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
பட்டியலின மாணவருக்கு ஐஐடியில் இடம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
ரூ.17,500 செலுத்தாததால் வாய்ப்பை இழந்த விவகாரம்