அதைத் தொடர்ந்து, இஸ்ரேலையொட்டி எல்லை நிலைகளிலிருந்து லெபனான் ராணுவம் பின்வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘ஏபி’ செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:
லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது. எனினும், அது முழுமையான படையெடுப்பாக இல்லாமல், குறிப்பிட்ட இலக்குகளில் மட்டும் நடத்தப்படும் துல்லிய தாக்குதலாக இருந்தது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்த தரைவழி ராணுவ நடவடிக்கையின்போது இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா படையினருக்கும் நேரடி மோதல் நடைபெற்ா என்பது குறித்து தகவல் இல்லை. இரு தரப்பினரும் கடந்த 2006-ஆம் ஆண்டில்தான் கடைசி முறையாக நேரடியாக தரைவழி மோதலில் ஈடுபட்டனர்.
முன்னதாக, லெபனானில் உடனடியாக தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவிடம் இஸ்ரேல் தெரியப்படுத்தியதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்தது.
அந்த ராணுவ நடவடிக்கை முழு படையெடுப்பாக இருக்காது எனவும் 2006-ஆம் ஆண்டில் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான போரில் மேற்கொள்ளப்பட்டதைவிட மிதமான தாக்குதலாகவே இருக்கும். தங்கள் நாட்டு எல்லைக்கு அருகே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காகவும் தங்கள் எல்லையோரப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக அமெரிக்காவிடம் இஸ்ரேல் கூறியுள்ளது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
Denne historien er fra October 01, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 01, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் மட்டுமே பொருளாதார வளர்ச்சி சாத்தியம்
சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் மட்டுமே பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக மேம்பாடு சாத்தியம் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் அந்த அணி, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது.
மேலும் ஓர் அமெரிக்க ட்ரோன் அழிப்பு: ஹூதிக்கள்
அமெரிக்காவின் அதிநவீன எம்க்யூ-9 ரீப்பர் ரகத்தை (படம்) சேர்ந்த மேலும் ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியது யேமனின் ஹூதி கிளர்ச்சி யாளர்கள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சர் உத்தரவு
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இலக்கு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
நிகழ் நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது இலக்கு என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
வேறு சிறப்பு நீதிபதியிடம் செந்தில் பாலாஜி வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எம்.பி. எம்எல்ஏகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்படும் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் விசாரணையை வேறு சிறப்பு நீதிபதியிடம் ஒப்படைப்பது தொடா்பாக நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
'தொழிலதிபர்களுக்காக ஆட்சி நடத்தும் பாஜக'- ராகுல் குற்றச்சாட்டு
மத்தியில் தற்போதைய பாஜக அரசு தொழிலதிபா்களுக்கான ஆட்சியை நடத்தி வருவதாகவும் எளிய மக்கள் போராடி வரும் நிலையில் பெரும் பணக்காரா்களிடம் செல்வம் குவிந்து வருவதாகவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
மணிப்பூர் விவகாரத்தில் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்
'மணிப்பூர், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற தீவிரமான விஷயங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்' என்று காங் கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
பிரதமர் குறித்த கார்கே கருத்து அவமானகரமானது
பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங் கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன் கார்கே தெரிவித்த கருத்து தரம் தாழ்ந்ததும் அவமானகரமானதும் ஆகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
பட்டியலின மாணவருக்கு ஐஐடியில் இடம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
ரூ.17,500 செலுத்தாததால் வாய்ப்பை இழந்த விவகாரம்