மாலத்தீவுக்கு முதலில் உதவும் நாடு இந்தியா - பிரதமர் நரேந்திர மோடி
Dinamani Chennai|October 08, 2024
மாலத்தீவுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மாலத்தீவுக்கு முதலில் உதவும் நாடு இந்தியா - பிரதமர் நரேந்திர மோடி

தில்லியில் மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸுடன் திங்கள்கிழமை மேற்கொண்ட இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு வந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவர் முதல்முறையாக இருதரப்பு அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் முகமது மூயிஸுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முார்மு திங்கள்கிழமை வரவேற்பு அளித்தார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் மூயிஸ் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நிதி நெருக்கடியில் மாலத்தீவு: சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் மூயிஸ், அதிபரான உடன், மருத்துவச் சேவைக்கான ஹெலிகாப்டர்களை இயக்கிவந்த இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என மூயிஸ் உத்தரவிட்டார். இதனால் இந்தியா-மாலத்தீவு நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது.

சமீப காலமாக மாலத்தீவு நிதி ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ள நிலையில், இந்தியாவுடனும் அதிபர் மூயிஸ் நட்பு பாராட்டி வருகிறார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் அவர் நேரில் பங்கேற்றார். அண்மையில், ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்ற முகமது மூயிஸ், ‘இந்தியாவுக்கு எதிரான கொள்கையை கடைப்பிடிக்கவில்லை’ என்று தெரிவித்தார். இந்தச் சூழலில், அவரது இந்திய வருகையும் பிரதமர் மோடி உடனான சந்திப்பும் முக்கியத்துவம் பெற்றது.

Denne historien er fra October 08, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 08, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்
Dinamani Chennai

மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்

விமானப்படை சாகச நிகழ்வைக் காண ஞாயிற்றுக்கிழமை பல லட்சம் மக்கள் குவிந்த சென்னை மெரீனா கடற்கரையில் 21.5 டன் குப்பை சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 08, 2024
கண்கவர் அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா
Dinamani Chennai

கண்கவர் அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
October 08, 2024
கிரீமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்
Dinamani Chennai

கிரீமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்தின் முக்கிய எண்ணெய்க் கிடங்கில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 08, 2024
இரு தேசத் தீர்வு சாத்தியமா?
Dinamani Chennai

இரு தேசத் தீர்வு சாத்தியமா?

இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி 1,139 பேரை ஹமாஸ் அமைப்பினர்கள் படுகொலை செய்து திங்கள்கிழமை (அக். 7) ஓராண்டு நிறைவுபெற்றது.

time-read
2 mins  |
October 08, 2024
புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம் - இஸ்ரோ தலைவர்
Dinamani Chennai

புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம் - இஸ்ரோ தலைவர்

விண்வெளி நிலையம் அமைப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த தலைமுறை ஏவுகலன் (என்ஜிஎல்வி) மேம்பாட்டுக்கான மாதிரி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
October 08, 2024
தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து
Dinamani Chennai

தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே (சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 08, 2024
ரூ.16,800 கோடி முதலீட்டில் இந்தியா, யுஏஇ இடையே உணவு வழித்தடம் - மத்திய அமைச்சர்‌ பியூஷ்‌ கோயல்‌
Dinamani Chennai

ரூ.16,800 கோடி முதலீட்டில் இந்தியா, யுஏஇ இடையே உணவு வழித்தடம் - மத்திய அமைச்சர்‌ பியூஷ்‌ கோயல்‌

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே (சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 08, 2024
வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடை: அமித் ஷா
Dinamani Chennai

வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடை: அமித் ஷா

வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
October 08, 2024
லாலு, இரு மகன்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்
Dinamani Chennai

லாலு, இரு மகன்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்குடன் பண மோசடி வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், அவருடைய மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

time-read
1 min  |
October 08, 2024
காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிய கட்டடங்கள்
Dinamani Chennai

காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிய கட்டடங்கள்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இந்த கட்டடங்களை அவர் திறந்தார்.

time-read
1 min  |
October 08, 2024