தமிழக ஆளுநர் தலைமையில் சென்னை தூர்தர்ஷனில் நடைபெற்ற ஹிந்தி வார விழாவில் பாடப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்துப்’ பாடலில் ‘திராவிட நல் திருநாடு’ என்ற சொற்கள் நீக்கப்பட்டதற்குக் கடுமையான கண்டனத்தைத் தமிழக அரசு தெரிவித்தது. இதில் உள்நோக்கம் இல்லை என்றும், தற்செயலாக நடந்த நிகழ்வு என்றும் தூர்தர்ஷன் மன்னிப்புக் கேட்டு விளக்கமும் அளித்தது. ஆனால், சர்ச்சை இன்னும் நின்றபாடில்லை.
1901 மே 24 அன்று பாலவனத்தம் பொ. பாண்டித்துரைத் தேவரால் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தஞ்சை தமிழ்ச்சங்கம் சாமிநாதனார் தலைமையிலும், 1911 மே 14 அன்று கரந்தைத் தமிழ்ச்சங்கம் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் முன்னிலையிலும் தொடங்கப்பட்டன. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் உமா மகேஸ்வரனார்.
கரந்தைத் தமிழ்ச்சங்கம் தொடங்கப் பெற்ற இரண்டாம் ஆண்டு முதல், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ என்னும் பாடல் சங்கத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கத் தொடங்கியது. இந்தப் பாடலை முதன்முதலில் மேடையில் பாடியவர் கூடலூர் வே.இராமசாமி. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு.
1967-இல் முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாதுரை, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு விழாக்கள், கல்லூரி, பள்ளி விழாக்கள் அனைத்திலும் பாடக் கூடிய ‘தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்’ ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தமிழறிஞர்களைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.
புலவர் குழு விவாதத்தின்போது தாயுமானவர் இயற்றிய ‘அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்’ என்ற பாடல் அல்லது திருக்குறளின் முதல் அதிகாரத்தை முழுவதுமாகப் பாடலாம் என விவாதிக்கப்பட்டது. தாயுமானவர் பாடல் ஹிந்து மதத்தைச் சார்ந்தது என்பதால், மற்ற மதத்தினர் அதை எதிர்த்தனர். திருக்குறளின் கடவுள் வாழ்த்திலும் ‘தாள்’, ‘அடி’ என்பது போன்ற சொற்கள் உருவ வழிபாட்டைக் குறிப்பதால் அதற்கும் எதிர்ப்பு எழுந்தது என்று புலவர் குழுத் தலைவர் அப்பாதுரையாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறைவாக, சிறந்த இரு பாடல்களாக மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ பாடலும், கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளை இயற்றிய ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே’ என்ற பாடலும் பரிந்துரைக்கப்பட்டன.
Denne historien er fra November 04, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 04, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத் இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/UyFG2rb8h4yH2Ir3WFnsys/1739769187055.jpg)
இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்
இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை; பல நூற்றாண்டுகளாக இந்தியா இருந்து வருகிறது' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
![சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/EbJWvgFAApFRMBCoAqLsys/1739769032346.jpg)
சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விதைத்தால் மட்டும் போதுமா?
பனைவிதை விதைப்பது பற்றிய பேச்சு இப்போது பரவலாகி வருகிறது. ஒரு கோடி பனைவிதை நடுவதற்கான பணியை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
![பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/NHvkVaitScyLsGIE9vXsys/1739769126891.jpg)
பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்
கணிதம், உடற்கூறியல், தாவரவியல், இயற்பியல், வணிகவியல், வரலாறு அரசியல், பொருளாதாரம், ஆட்சியியல் முதலான பல்வேறு துறைச் சொற்களைத் திருத்திச் சீரமைக்கும் பணியில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை முனைந்து செயல்பட்டதை அவருடைய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
![பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை! பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/MWX4F4HLBjf0hzxbqYxsys/1739769109647.jpg)
பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!
ரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே அண்மையில் நடைபெற்ற வாஷிங்டன் சந்திப்பு இரு தரப்பாலும் திருப்திகரமானது என சொல்லிக் கொள்ளப்பட்டாலும், அதில் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல அம்சங்களை அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதைக் குறித்த எதிர்பார்ப்பை எழுப்புகிறது.
![கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/cKvLW1wIbgQw2NpKr47sys/1739769142972.jpg)
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
மானாமதுரை, பிப். 16: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.
![இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/k4N6azPb00mGdwtn6iEsys/1739769159857.jpg)
இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு
மஸ்கட், பிப். 16: 'இந்திய பெருங்கடல் உலகின் உயிர்நாடி' என்று குறிப்பிட்ட மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அப்பிராந்தியத்தின் வளர்ச்சி, இணைப்பு, கடல்சார் பாதுகாப்புக்கு நாடுகள் ஒருங்கிணைய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
![ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/vlZ8wa1R6vYmkKXAA3Ssys/1739768778595.jpg)
ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். (வலது) மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு.
![திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/8Pus070Trlgb7HyayWysys/1739769055068.jpg)
திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை
திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு புனரமைக்கப்பட்ட தாடங்கம் (காதணி) பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மும்பை தாக்குதலுக்கு முன் தென்னிந்தியாவுக்கும் பயணித்த தஹாவூர் ராணா
கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பரில் நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயங்கரவாதி தஹாவூர் ராணா பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.