
மதுரை மாநகர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பீ.பி.குளம் கண்மாயையொட்டி, முல்லைநகர் பகுதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புக்கான இடங்கள் குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு, அதில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பீ.பி. குளம் கண்மாயில் அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை மறுசீராய்வு செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்ட முடியாது எனத் தெரிவித்தது. அங்கு குடியிருப்பவர்களை மாற்று இடத்தில் குடியமர்த்துவதற்கு உரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். இந்தப் பகுதி மக்களின் கோரிக்கை மனுவைப் பெற்று, அதனடிப்படையில் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்தப் பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்காமலும், அவர்களது மனுக்களைப் பரிசீலனை செய்யாமலும் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என அனைத்து வீடுகளிலும் பொதுப்பணித்துறை சார்பில் குறிப்பாணை (நோட்டீஸ்) ஒட்டப்பட்டது.
Denne historien er fra November 12, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 12, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

ஐசிஎஃப் ரயில் கண்காட்சி நிறைவு
சென்னை ஐசிஎஃப்- பில் 3 நாள்கள் நடைபெற்ற ரயில் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. இந்தக் கண்காட்சியை நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்!
மழை வெள்ளம், அடர் பனி ஆகியவற்றைத் தொடர்ந்து வெயிலின் கொடுமையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராகிவரும் நேரத்தில் திடீரென்று ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி பிரச்னை தலைதூக்கியுள்ளது.

1,000 பேருக்கு நல உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்
திருவேற்காட்டில் திமுக சார்பில் 1,000 பேருக்கு நல உதவிகளை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
மக்கள் நலனைவிட இணையவழி விளையாட்டு நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா? - ராமதாஸ் கேள்வி
மக்கள் நலனை விட, இணையவழி சூதாட்ட நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது
லஞ்ச வழக்கில் சிபிஐ நடவடிக்கை
பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத்தொகை 33% அதிகரிப்பு
பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத்தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..
நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படவுள்ளது.

அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவே தேசிய கல்விக் கொள்கை
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து: பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்வி
பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.