நம்முடைய எட்டாம் வகுப்பு சரித்திர புத்தகத்தில் பண்டைய மன்னர்கள் அசோகர், அக்பர், ராஜராஜ சோழன், ஏன் சுமார் 325 ஆண்டுகளுக்கு உட்பட்ட ராணி மங்கம்மாள் உட்பட யாரைப் பற்றி படித்தாலும் அவர்கள் குளம் வெட்டி னார்கள், கோயில் கட்டினார்கள், சாலைகள் அமைத்தார்கள், மரம் நட்டார்கள் என்று வரலாறு சொல்லும். ராணி மங்கம்மாள் அமைத்த சாலை இன்றும் அவர் பெயரால் மதுரையிலிருந்து தென்காசி வரை வருகிறது.
பயணம் என்பதுவாழ்வியலின் ஒரு அங்கம். மனித குலத்தின் மகத்தான வளர்ச்சி அவனுடைய முதல் கண்டுபிடிப்பான சக்கரத்தில் தொடங்குகிறது. சக்கரம் அவனது வாழ்வையே புரட்டிப் போட்டது. அது வரை காலால் நடந்து கொண்டிருந்த மனிதன், மாட்டு வண்டி, குதிரை இழுக்கும் ஜட்கா வண்டி, மோட்டார் வண்டி, ரயில் வண்டி, ஆகாய விமானம் என பரிணாம வளர்ச்சியடைந்து, இன்று சக்கரமேயில்லாமல் அண்டத்தைச் சுற்றும் ராக்கெட் வரை அவன் பயணங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
'ஏழு ஆண்டுகளுக்குள் காசிக்குச் சென்று திரும்பாவிட்டால், காரியம் பண்ணி விடுங்கள்' என்ற காலம் போய், காலையில் கிளம்பி, கங்கையில் குளித்து, மறைந்த பெற்றோர்களுக்கு காரியங்கள் செய்துவிட்டு, மாலையில் வீடு திரும்பும் அளவிற்கு பயணங்கள் எளிதாகிவிட்டன.
உள்ளூர் தவளைகளாக இருந்தவர்கள் இன்று படிப்புக்காகவும், வேலைக்காகவும், வியாபாரத்திற்காகவும் வெளியூர் சென்று வசித்தாலும், ஆண்டுக்கொரு முறை குல சாமியை கும்பிடவும், தைப்பொங்கலுக்கும், தீபாவளிக்கும் ஊருக்குச் சென்று, உறவினருடன் கூடி மகிழ்வது இந்திய கலாசாரத்தின் அங்கம். இந்தப் பயணங்களுக்கு ஜாதியும், மொழியும் தடையல்ல.
Denne historien er fra November 16, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 16, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

மெத்வதெவ், சிட்சிபாஸ் முன்னேற்றம்
மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரர்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவர் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருணைப் பணி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு மருத்துவர்கள் கோரிக்கை
கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னமும் அதை அரசு நிறைவேற்றவில்லை என்று மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி
இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாக மோரீஷஸ் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்
செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.
வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த 'ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024' மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு: பாஜக குற்றச்சாட்டு
நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்குர் பச்சால் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
மக்களவைத் தலைவரிடம் திமுக அளித்தது
நியூயார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு
மும்பையில் மீண்டும் தரையிறக்கம்