நம்முடைய எட்டாம் வகுப்பு சரித்திர புத்தகத்தில் பண்டைய மன்னர்கள் அசோகர், அக்பர், ராஜராஜ சோழன், ஏன் சுமார் 325 ஆண்டுகளுக்கு உட்பட்ட ராணி மங்கம்மாள் உட்பட யாரைப் பற்றி படித்தாலும் அவர்கள் குளம் வெட்டி னார்கள், கோயில் கட்டினார்கள், சாலைகள் அமைத்தார்கள், மரம் நட்டார்கள் என்று வரலாறு சொல்லும். ராணி மங்கம்மாள் அமைத்த சாலை இன்றும் அவர் பெயரால் மதுரையிலிருந்து தென்காசி வரை வருகிறது.
பயணம் என்பதுவாழ்வியலின் ஒரு அங்கம். மனித குலத்தின் மகத்தான வளர்ச்சி அவனுடைய முதல் கண்டுபிடிப்பான சக்கரத்தில் தொடங்குகிறது. சக்கரம் அவனது வாழ்வையே புரட்டிப் போட்டது. அது வரை காலால் நடந்து கொண்டிருந்த மனிதன், மாட்டு வண்டி, குதிரை இழுக்கும் ஜட்கா வண்டி, மோட்டார் வண்டி, ரயில் வண்டி, ஆகாய விமானம் என பரிணாம வளர்ச்சியடைந்து, இன்று சக்கரமேயில்லாமல் அண்டத்தைச் சுற்றும் ராக்கெட் வரை அவன் பயணங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
'ஏழு ஆண்டுகளுக்குள் காசிக்குச் சென்று திரும்பாவிட்டால், காரியம் பண்ணி விடுங்கள்' என்ற காலம் போய், காலையில் கிளம்பி, கங்கையில் குளித்து, மறைந்த பெற்றோர்களுக்கு காரியங்கள் செய்துவிட்டு, மாலையில் வீடு திரும்பும் அளவிற்கு பயணங்கள் எளிதாகிவிட்டன.
உள்ளூர் தவளைகளாக இருந்தவர்கள் இன்று படிப்புக்காகவும், வேலைக்காகவும், வியாபாரத்திற்காகவும் வெளியூர் சென்று வசித்தாலும், ஆண்டுக்கொரு முறை குல சாமியை கும்பிடவும், தைப்பொங்கலுக்கும், தீபாவளிக்கும் ஊருக்குச் சென்று, உறவினருடன் கூடி மகிழ்வது இந்திய கலாசாரத்தின் அங்கம். இந்தப் பயணங்களுக்கு ஜாதியும், மொழியும் தடையல்ல.
Denne historien er fra November 16, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 16, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

மாசாணியம்மன் கோயிலின் 28 கிலோ தங்கம் எஸ்பிஐவசம் ஒப்படைப்பு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் காணிக்கையாக கிடைக்கப் பெற்ற 28 கிலோ 906 கிராம் தங்கத்தை எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளிடம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு புதன்கிழமை ஒப்படைத்தார்.
நீட் தேர்வு: பாடத் திட்டம் வெளியீடு
இளநிலை நீட் தேர்வுக்கான பாடத் திட்ட விவரங்களை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.

சைவ சித்தாந்த தத்துவ மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்
சைவ சித்தாந்த தத்துவ மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் கேட்டுக்கொண்டார்.

சரிவைக் கண்ட சர்க்கரை உற்பத்தி
சில மாநிலங்களில் சர்க்கரை ஆலைகள் உற்பத்தி தாமதமாகத் தொடங்கியதால் 2024-25-ஆம் சந்தைப் பருவத்தின் டிச. 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி 17 சதவீத சரிவைக் கண்டுள்ளது.

நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் கடன் பட்டுவாடா 46% அதிகரிப்பு
இந்திய நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்களின் கடன் பட்டுவாடா கடந்த அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஜப்பான்: ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் மீண்டும் தோல்வி
ஜப்பானின் தனியார் புத்தாக்க நிறுவனமான ஸ்பேஸ் ஒன், தனது ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை இரண்டாவது முறையாக விண்ணில் செலுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

சென்செக்ஸ் 3-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

காஸா: மேலும் 38 பேர் உயிரிழப்பு
காஸா குதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மேலும் 38 பேர் யிரிழந்தனர்.

பாகிஸ்தான் போலியோ தடுப்பு முகாம்: குண்டுவெடிப்பில் 3 வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் போலியோ தடுப்புப் பணிகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.

ரஷிய தளபதி படுகொலை: உஸ்பெகிஸ்தான் இளைஞர் கைது
ஸ்கூட்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கியத் தளபதி இகார் கிறிலோவ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.