மொழிக் கொள்கை உறுதியைக் காட்டவே ‘ரூ’
சென்னை, மார்ச் 16: மொழிக்கொள்கையில் நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவே நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ‘ரூ’ என பயன்படுத்தினோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
மத்திய நிதியமைச்சர் இதனைப் பிரச்னையாக எழுப்பியதால், இந்திய அளவில் தமிழக பட்ஜெட் ‘ஹிட்’ அடித்ததாக முதல்வர் கூறினார்.
நிதிநிலை அறிக்கை தயாரிப்பு, அதிலுள்ள முக்கிய அம்சங்களை விளக்கி ‘உங்களில் ஒருவன்’ எனும் தலைப்பில் கேள்வி-பதில் வடிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட காணொளியில் கூறியிருப்பதாவது: நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்காக பொருளாதார ஆலோசனைக் குழுவினரிடம் கருத்துகள் கேட்டோம்.
அதேநேரத்தில், அடித்தட்டு மக்களிடமும் அவர்களின் தேவைகள் என்ன என்று கேட்டறிந்து கொண்டோம். மற்ற மாநிலங்கள், நாடுகளில் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற திட்டங்களைப் பார்த்து, அதனை நம்முடைய மாநிலத்துக்குக் கொண்டு வர முடிவு செய்தோம்.
இதற்காக, பல நாள்கள் தலைமைச் செயலகத்தில் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அமர்ந்து பேசி நிதிநிலை அறிக்கையைத் தயாரித்தோம். இந்த நிதிநிலை அறிக்கையை நாளிதழ்கள் பலவும் பாராட்டியுள்ளன.
Denne historien er fra March 17, 2025-utgaven av Dinamani Cuddalore.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 17, 2025-utgaven av Dinamani Cuddalore.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்
பிகாரில் அமித் ஷா பேச்சு
மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவர் கைது
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள மசூதியில், பாறைகளைத் தகர்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுவும் ஒருவகை நிறவெறிதான்!
கேரள மாநில அரசின் தலைமைச் செயலர் சாரதா முரளிதரன், நிறப் பாகுபாட்டை தான் எதிர்கொண்டதாகவும், தன் கணவரின் வெள்ளை நிறத்தையும், தனது கருப்பு நிறத்தையும் ஒப்பிட்டு கூறப்பட்ட விமர்சனங்களால் தான் சோர்வடைந்ததாகவும் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
103 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 103 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் ஒரே வழி என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.
ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விஸ்வவாசு புத்தாண்டு பிறப்பான யுகாதி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது.
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: காரைக்கால் இளைஞர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் காரைக்காலைச் சேர்ந்த இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சைத்ர நவராத்திரி, யுகாதி: ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து
சைத்ர நவராத்திரி, யுகாதி, குடிபத்வா, செட்டிசந்த் ஆகிய பண்டிகைகளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'டாங்கி' ரூட்டில் மனிதக் கடத்தல்: ஒருவர் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதற்கு பயன்படுத்தப்படும் அபாயகரமான பாதையான 'டாங்கி ரூட்' வழியே ஒருவரை அனுப்பிய குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிரிழப்பு
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.