
வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாதவரம், மணலி, எண்ணூர், கொரட்டூர், தாம்பரம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி இன்று 3-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 4,500 பேர் நேற்றும், இன்றும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அடுக்குமாடிகளில் யாராவது சிக்கி தவிக்கிறார்களா என்பதை டிரோன்கள் மூலம் ஆய்வு செய்யும் பணி நேற்றும், இன்றும் நடந்தது. டிரோன்கள் மூலம் அதிக பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு மீட்பு படையினர் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
தென்சென்னை பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கில் இருந்து வெளிவர முடியாமல் சிக்கி தவிக்கும் மக்களுக்கு நேற்று ஹெலிகாப்டர் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இன்றும் 2-வது நாளாக விமானப் படை வீரர்கள் ஹெலிகாப்டர்களில் சென்று உணவு பொட்டலங்களை வழங்கினார்கள்.
புயல், மழை பாதிப்புக்கு இதுவரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 22 பேர் பலியாகி உள்ளனர். தண்ணீரை முழுமையாக அகற்றிய பிறகு பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
Denne historien er fra December 07, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 07, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

நவீன பால்பதன ஆலை கட்டுமான பணி மாநிலங்களவை உறுப்பினர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், ரூ. 89.30 கோடி மதிப்பில் 2.0 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நவீன பால்பதன ஆலையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

காரைக்கால் முழுவதும் விடியற்காலையில் குடிநீர், இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்
கலெக்டரிடம் தமுமுக கோரிக்கை

பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிகழ்ச்சி, மதுரை விஷால் டி மால் மற்றும் மேல் மாசி வீதி கிளைகளின் சார்பில், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது.

பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றிவிட்டு.2026-ல் த.வெ.க. வரலாறு படைக்கும்: விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அதன் தலைவர் விஜய், \"Friend, My Brother\" என பேசத் தொடங்கிய விஜய், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மகா சிவராத்திரி: சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்
சிவபெருமானை போற்றி வணங்கும் சிவராத்திரிகளில் மகா சிவராத்திரி முதன்மையானது.

2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கப்படும்
கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ பேச்சு

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உங்கள் சேவை இருக்க வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ரூ.1000க்கும் மேல் புத்தகம் வாங்கும் வாசிப்பாளர்கள் கௌரவிப்பு: ஆட்சியர் அழகுமீனா தகவல்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 19.02.2025 அன்று துவக்கி வைத்தார்கள்.

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக ரத்து
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது.