மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கி மக்கள் கடும் தவிப்புக்கு உள்ளானார்கள்.
சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற முடியாதபடி மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். கடந்த 4 நாட்களாக மீட்பு பணிகள் நடந்தன. 420 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. அங்கு சுமார் 42 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர்.
புயல் மழை பாதித்த பிறகு கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் மிகப்பெரிய முடக்கம் ஏற்பட்டது. மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பால்-குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
நேற்று முன்தினம் முதல் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. நேற்று 95 சதவீத இடங்களில் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. மாநகர பஸ்கள் மற்றும் மின்சார ரெயில்கள் முழு அளவில் இயக்கப்பட்டதால் நேற்று பெரும்பாலான மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் நிலைக்கு வந்தனர்.
நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 42 ஆயிரம் பேரில் சுமார் 30 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டனர். மருத்துவ குழுக்கள் மூலம் அவர்களுக்கு உதவி செய்யப்படுகின்றன.
நேற்று முன்தினம் வரை 800 இடங்களில் தண்ணீர் வடியாமல் இருந்தது. நேற்று 343 பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் நேற்று இரவு 50 பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டு விட்டது. இன்று காலை மற்ற இடங்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஆனால் அந்த இடங்களில் தண்ணீர் அகற்றுவதில் கடும் சவாலும், சிக்கலும் நீடிக்கிறது.
Denne historien er fra December 08, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 08, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது