
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா மற்றும் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்கள் துணைத் தலைவர் அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், சுவர்ணராஜ், பிரவீன்குமார் டாட்டியா, ராஜேந்திர பிரசாத், ரமீத் கபூர், முகமது ரஃபி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சிறுபான்மையினர் மக்களுக்கு தேவையான திட்டங்களையும், அவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வியல் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. தமிழ்மொழி அல்லாமல் பிற மொழியை தாய்மொழியாக கொண்டு தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், திட்டங்களும் அரசியலமைப்பு திட்டத்தின்படி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செய்து தரப்படுகிறது. இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 13 மாவட்டங்களிலிருந்து சிறுபான்மையினரிடமிருந்து பெறப்பட்ட 489 கோரிக்கை மனுக்களில் 302 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 14வது மாவட்டமாக ஈரோடு மாவட்டத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
மேலும், கூட்டங்களிலேயே 70 முதல் 80 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர், காவல் அதிகாரிகள் உடனடியாக இணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Denne historien er fra March 21, 2025-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 21, 2025-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடு, அலுவலகம், விடுதிகளில் சிபிஐ சோதனை
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ.கொல்லப்பட்ட வழக்கு: மேலும் ஒருவர் கைது
நெல்லை மாவட்டம் டவுண் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசைன்.
ஐ.பி.எல்.2025: சென்னை-மும்பை அணிகள் இன்று மோதல்
10 அணிகள் பங்கேற்றுள்ள 18வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்து மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் வைத்து நடத்தப்பட்டது.

திருவெண்ணெய்நல்லூரில் இஃப்தார் விருந்து
திருவெண்ணெய்நல்லூரில் திமுக சார்பில் அப்துல் பாரி மஸ்ஜித் மஸ்ஜிதேநூர் சுன்னத் ஜமாத்தில் இஃப்தார் விருந்து நடந்தது.

அதிமுகவுடன் கூட்டணியா?-பாஜக மேலிட இணை பொறுப்பாளர் பதில்
திருச்சி விமான நிலையத்தில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இலவச கண் சிகிச்சை முகாம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா 85வது பிறந்த நாளை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் எம்ஏஎஸ்எம் மத்திய பகுதி விழுப்புரம் மாவட்டம் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் விழுப்புரம் அடுத்த கெடார் செந்தில் திருமண மண்டபத்தில் மாவட்ட துணை தலைவர் பழனி தலைமையில் மாவட்டத் தலைவர் மூர்த்தி மணிவாசகம் முன்னிலையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

நெடுங்காடு காவல் நிலையத்தை விடுதலை சிறுத்தை முற்றுகை
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவனை முகநூலில் அவதூறாக பதிவு செய்த, காரைக்கால் நெடுங்காடு பாஜக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட விடுதலை விடுதலை சிறுத்தை கட்சியினர் நெடுங்காடு காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் இருந்து 5 லட்சம் பேரை நாடு கடத்த நடவடிக்கை- டிரம்ப் அதிரடி
பொருளாதார ரீதியாகவும் வன்முறை, உள்நாட்டு போர் போன்ற காரணங்களாலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி கூட்டம் கூட்டமாக அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர்.

பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதன் மூலம் போட்டித்தேர்வுகளுக்கு தயாராக முடியும்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு