தான் தலைவராக இருந்த காலத்தில் கால ஓட்டத்திற்கு ஏற்ப தமிழர்களுக்காகத் தேசிய அரசியலை நடத்திச் சென்றார்.
தனக்குப் பிறகு தமிழரசுக் கட்சி மரபு விழுமியங்களுக்கேற்ப பொருத்தமானதொரு தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தமிழர் அரசியல் அரங்கில் அறிமுகப்படுத்தியவராக சம்பந்தன் இருக்கிறார்.
அதே நேரத்தில், 2009 மேயுடன் யுத்தம் மௌனித்தபின் சர்வதேச உறவுகள், பூகோள அரசியல் யதார்த்தங்களைக் கருத்திலெடுத்து தளிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்து சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்குத் தயார் என பிரகடனப்படுத்திக் கொண்டார். அதற்காகவே தொடர்ந்தும் செயற்பட்டும் வந்தார்.
அதே நேரம், புலிகளின் காலத்தில் மோசமான தமிழ்- முஸ்லீம் உறவுகளை மேம்படுத்தும் வகையில், கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக நசீர் அகமட்டை நியமிப்பதற்கு ஆதரவு கொடுத்தார். அதனால், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழரசுக் கட்சி முஸ்லிம்களுக்குத் தேவையற்ற வகையில் ஆதரவு வழங்குவதாக விமர்சனத்தினையும் சம்பாதித்துக் கொண்டது இருந்தாலும், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு கிழக்கு மாகாணத்தில் அதிகரித்தது என்றே கூறவேண்டும். இருப்பினும் கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக விவகாரம் உள்ளிட்ட விடயங்களில் முஸ்லிம்கள் தங்கள் நிலையிலிருந்து இறங்கவில்லை என்பது வேறுகதை 91 வயதான இராஜவரோதயம் சம்பந்தன் 5 பெப்ரவரி 1933இல் திருமலையில் பிறந்தார். சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர்.
இரா.சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி,மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று.இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.
1977ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினரானார்.
1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (த.வி.கூ) பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.
Denne historien er fra July 02, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 02, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா காட்டமான பதில்
நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் அமைச்சரின் பேச்சுக்கு, நடிகை சமந்தா காட்டமாக பதிலளித்துள்ளார்.
முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா
அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஜப்பானில் வெடித்தது
2ஆம் உலகப் போரில் புதைக்கப்பட்ட வெடிகுண்டு
மணிப்பூரில் மீண்டும் மோதல்
மணிப்பூரில் நாகா சமூகத்தினரிடையே புதன்கிழமை (02) வெடித்த மோதலின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகினர்.
லில்லியிடம் தோற்ற றியல் மட்ரிட்
மியூனிச்சை வென்ற வில்லா
பரிசுபெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத் தண்டனை
சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'கொங்கை' எனும் வலிசுமந்த கதை
இந்த வார்த்தையைக் கேட்கும்போதே சிலருக்குப் பலவிதமான காட்சிகள் கண்முன் வந்து போகலாம்.
போதைக்கு எதிராக கவனயீர்ப்பு
சர்வதேச நல்லொழுக்க தினமான வியாழக்கிழமை (03) அன்று வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று சங்கானை பேரின்ப தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
“மீனவர்களை விடுவிக்கவும்”
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள
சபாநாயகரும் போட்டியிடார்
மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானார்