ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாயின் "சூனியமாகும்”
Tamil Mirror|September 20, 2024
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது, வாக்களிப்பு நிலையத்தில் 'ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால், அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்க நேரிடும் என்பதுடன், அங்கே மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாயின் "சூனியமாகும்”

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை கட்டாயமானது இல்லை என்றும், வாக்காளர் அட்டை கிடைக்காதோர் வாக்களிப்பு நிலையத்தில் செல்லுபடியான அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்று தெரிவித்துள்ள அவர், "வாக்கு உங்கள் உரிமை, பலம். அதனைக் கட்டாயம் பயன்படுத்துங்கள்.” என கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில், வியாழக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "ஜனாதிபதி தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, செப்டம்பர் 21 ஆம் திகதி இயலுமானவரைக் காலைவேளையிலேயே சென்று வாக்குரிமையைப் பயன்படுத்தி விடுங்கள் என்று கேட்டுக்கொண்ட அவர், வாக்களித்த பின்னர் வீடுகளுக்குச் செல்லுங்கள்.

தேர்தல் விதிமீறல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

தேர்தல்கள் கடமைகளுக்காக சகல அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நியமனக் கடிதத்தின்படி உரிய இடத்திற்குச் செல்ல வேண்டும்.

அவர்களின் நியமனக் கடிதங்களை மாற்றவோ, இரத்துச் செய்யவோ முடியாது. கடமைக்கு வராவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்குள் தேர்தல் சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Denne historien er fra September 20, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra September 20, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
கிழக்கு மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல் பஹ்ரியா பிரகாசிப்பு
Tamil Mirror

கிழக்கு மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல் பஹ்ரியா பிரகாசிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், கல்முனை அல் பஹ்ரியா வித்தியாலயம் பிரகாசித்தது.

time-read
1 min  |
September 20, 2024
பலமான நிலையில் நியூ சிலாந்து
Tamil Mirror

பலமான நிலையில் நியூ சிலாந்து

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் பலமான நிலையில் நியூசிலாந்து காணப்படுகின்றது.

time-read
1 min  |
September 20, 2024
மூன்று வாகனங்கள் மோதி விபத்து; ஒருவர் காயம்
Tamil Mirror

மூன்று வாகனங்கள் மோதி விபத்து; ஒருவர் காயம்

அக்குரஸ்ஸ தெனியாய வீதியில் ஹுலங்தாவ பிரதேசத்தில் வியாழக்கிழமை (19) மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
September 20, 2024
ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாயின் "சூனியமாகும்”
Tamil Mirror

ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாயின் "சூனியமாகும்”

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது, வாக்களிப்பு நிலையத்தில் 'ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால், அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்க நேரிடும் என்பதுடன், அங்கே மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

time-read
2 mins  |
September 20, 2024
நெடுந்தாரகை பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தது
Tamil Mirror

நெடுந்தாரகை பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தது

நெடுந்தாரகை பயணிகள் படகு சுமார் ஒரு வருடத்தின் பின்னர் வியாழக்கிழமை (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

time-read
1 min  |
September 20, 2024
“சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும்”
Tamil Mirror

“சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும்”

தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஜனாதிபதி தெரிவிப்பு

time-read
1 min  |
September 20, 2024
Tamil Mirror

500 பணியாளர்கள் பாதிப்பு

பொலன்னறுவை, பக்கமூன பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 500 பணியாளர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
September 20, 2024
Tamil Mirror

சனியன்று விசேட போக்குவரத்து திட்டம்

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு 1,358 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 20, 2024
"9 மாகாணங்களிலும் கண்காணிக்கின்றோம்”
Tamil Mirror

"9 மாகாணங்களிலும் கண்காணிக்கின்றோம்”

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் 32 குறுகிய கால தேர்தல் கண்காணிப்பாளர்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளனர்.

time-read
1 min  |
September 20, 2024
Tamil Mirror

நான்கு துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி

நாடளாவிய ரீதியில், புதன்கிழமை (18) இரவும் வியாழக்கிழமை (19) மாலை 6 மணிக்கு உட்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற நான்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், நால்வர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
September 20, 2024