ஆனால், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கூட தமிழில் பெயர்ப்பலகை இல்லை' என்று வருத்தம் தெரிவித்த காணொளி வெளியானது. இதற்காக தமிழர்கள் யாரும் பெரிதாக வெட்கப்பட்டதாக தெரியவில்லை.
தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, தமிழ் வளர்ச்சித் துறை கடந்த மாதம் எச்சரித்தது.
அப்போது, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு துறைகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள துறைகளிலும், ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகைகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
உடனே, தமிழ் ஆட்சி மொழி சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அதை மீறுவது அரசு துறையாக இருந்தாலும், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதனால், உடனே தமிழில் பெயர்ப்பலகையை வைக்க வேண்டும். ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ பெயர் பொறிக்க விரும்பினால், தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் 5:3:2 என்ற விகித அளவில் எழுதிக்கொள்ளலாம் என்ற பழைய பல்லவியை அதிகாரிகள் பாடினர். ஆனாலும் இவர்கள் வீரம் எடுபடுமா? என்று தெரியவில்லை.
1928 முதல் ஒன்றிய ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்ப இந்தியை தமிழ் நாட்டில் திணிப்பதில் குறியாக உள்ளனர். கூடாததற்கு தற்போதைய பாஜக அரசு, சமஸ்கிருதத்தையும் சேர்த்து இணிக்க முயல்கிறது. புதிய கல்விக்கொள்கையில், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியாவின் ஒரு மொழி என்று சூசகமாக இந்தியை நுழைக்க நயவஞ்சக திட்டம் தீட்டுகிறது.
உலகின் பெரும்பாலான நாடுகள் தொடக்கக் கல்வியில் ஒரு மொழிக்கொள்கையையே கொண்டிருக்கின்றன. அதாவது தங்கள் தாய்மொழியை மட்டுமே கற்றுக் கொடுக்கின்றன. நடுநிலைக்கல்வியில் விரும்பினால் ஆங்கிலத்தை கற்றுத்தருகின்றன.
இந்தியாவின் ஆட்சி மொழி எல்லா சமூகங்களரக்கும் ௪ம தொலைவு உடையதாக இருக்க வேண்டும் என்று அண்ணா கூறினார். ஆங்கிலத்தில் ஒரு தேர்வை நடத்தும்போது அது நமக்கும் இந்தி மாணவருக்கும் சம தூரத்தில் இருக்கும். ஆனால், இந்தியில் நடத்தினால் நமக்கு தொலைவிலும், தமிழில் நடத்தினால் இந்தி மாணவருக்கு தொலைவிலும் மொழி போய்விடும். அதனால்தான் தாய்மொழிக்கல்வியோடு, பொது மொழியான ஆங்கிலம் போதுமென்று அண்ணா மட்டுமல்ல, பிற மொழி அறிஞர்களும் கருதினர்.
Denne historien er fra August 28, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 28, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
விருப்பமும் திணிப்பும்!
அண்மையில் ஒரு மருத்துவ மாநாட்டிற்கு சென்று வந்தாள் என் தோழி. அங்கு வந்த ஒரு மருத்துவர், நல்லா இருக்கீங்களா? எங்க ஒர்க் பண்றீங்க? என்று நலம் விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். தோழிக்கு அவரை நினைவில் இல்லை.
இணையங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபாச விளம்பரங்கள்!
இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இணையம், மொபைல் என பொழுதைக் கழிக்கின்றனர். இணையத்தில் சமூக வலைதளம் மூலம் நல்ல விசயங்கள் வரிசை கட்டி வந்தாலும் ஆபாசங்களுக்கும் பஞ்சமில்லை.
ஒலிம்பிக் ஹீரோக்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.
உன்னை நானறிவேன்,
“ரெடியா..?” \"இல்லயில்ல, இன்னும் கொஞ்சம் பொறுங்க.'' \"மணி இப்பவே பத்து ஆச்சுதியா.' தலையை குலுக்கிக் கொண்டபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து ஒரு காலை மடக்கி, மறுகாலை தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் அக்னீஸ்வர்.
நான்ஸ்டிக் சமையல்...கவனம்!
மண்பாண்ட சமையல் என்பது பாரம்பரியம் மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.
நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, மயோசிடிஸ் எனும் விசித்திரமான சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
மோடி அரசின் இந்தி,திணிப்பு...
அண்மையில் ஆங்கிலேயர் ஒருவர் சென்னை நகர வீதியில் நின்று, கடைப்பெயார்ப் பலகைகளை சுட்டுக்காட்டி, 'சென்னையின் முதன்மை மொழி தமிழ். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி.
ரகு தாத்தா
இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் நாயகி, தன் திருமணத்தை நிறுத்த இந்தி பரீட்சை எழுத வேண்டிய சூழல் வர,அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
திங்கலான்
தன் இன மக்களை அடிமை வாழ்வில் இருந்து மீட்பதற்காக போராடும் நாயகன், கோலார் தங்க வயலைத் தேடி செல்லும் பயணம் தான் படத்தின் கதை.
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.