திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
Kanmani|October 09, 2024
திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
தவா
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!

அந்த நெய்யில் மாமிச கொழுப்பு எசென்ஸ் கலந்த மினரல் ஆயில் இருக்கிறது என்பது தான் இப்போது சர்ச்சைக்கு காரணம், யார் ஆட்சியில் இந்த தவறு நடந்தது என அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்.

இந்த அரசியல் ஒருபுறம் இருக்கட்டும், திருப்பதி லட்டுக்கு ஒரு பாரம்பரிய வரலாறு இருக்கிறது, அது உங்களுக்கு தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்கப்படுவது மொழிவாரி மாநிலங்கள் பிரிவிக்கப்படுவதற்கு முன்பு இருந்தே சுமார் 310 ஆண்டு களாக நடைமுறையில் இருக்கிறது.

முதன்முறையாக பல்லவர்களின் காலத்தில் கி.பி.830-ல் வெங்கடேச பெருமாளுக்கு பிரசாதம் படைத்து பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

முறையான பாதை, உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாத அந்த காலத்தில் பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு ஏழு மலைகள் ஏறி தரிசனம் செய்ய செல்ல வேண்டும். சாமி தரிசனம் செய்த பிறகு சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு, பிறகு ஊர் திரும்புவது அன்றைய மக்களின் வழக்கம்.

அப்படி அவர்கள் மலையில் இருந்து மீண்டும் ஏழு மலைகளைக் கடந்து வீடு திரும்பும் வரை உணவின் தேவையை கருத்தில் கொண்டு, கோவிலில் பிரசாதம் வழங்கத் தொடங்கினர்.

பின்னர் இரண்டாம் தேவராயர் மூன்று கிராமங்களை கோவிலுக்கு மானியமாகவும் மற்றும் தினசரி பிரசாத செலவுக்கு நாணயங்களும் வழங்கியுள்ளார். இரண்டாம் தேவராயரின் மற்றொரு அதிகாரியான அமாத்ய சேகர மல்லண்ணா, வெங்கடேஸ்வர பெருமாளுக்கு நைவேத்தியம் மற்றும் நித்யதீபம் ஏற்பாடுகளைச் செய்தார். இறைவனுக்கு உணவு பிரசாதம் வழங்கும் நேர அட்டவணையை அறிமுகப்படுத்தினார்.

காலம் மாற மாற, பிரசாதத்தின் பெயர்களும் மாற்றம் கண்டன. கி.பி.1445ஆம் ஆண்டுக்கு முன்பு வரை திருப்பதி கோவிலில் 'திருப்பொங்கம்' என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது 'சுய்யம்' என்ற இனிப்பு பிரசாதத்தை வழங்கத் தொடங்கினர்.

அதன் பிறகு அப்பம் வழங்கினர். காரணம், மலையில் இருந்து பிரசாதம் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல நீண்ட காலம் ஆகும் என்பதால் எளிதில் கெட்டுப் போகாமல் இருக்க, இனிப்பு பலகாரத்தை பிரசாதமாக வழங்கினர்.

Denne historien er fra October 09, 2024-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 09, 2024-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KANMANISe alt
ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்
Kanmani

ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்

சோஷியல் மீடியாவில் படு பிஸியாக ஹாட் புகைப்படங்களை ட்வீட்டி வரும் மாளவிகா மோகனனுக்கு டிராவல், போட்டோகிராபி என வித்தியாசமான ஆர்வமும் உண்டு. தமிழில் கார்த்தியுடன் சர்தார்-2 படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனனுடன் ஒரு அழகான சிட்சாட்.

time-read
2 mins  |
February 19, 2025
காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா!
Kanmani

காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா!

பிப்ரவரி 14 காதலர் தினம்... இன்றைய டிஜிட்டல் யுக காதல், முந்தைய தலைமுறையினர் புரிந்து கொள்ள முடியாத ரகம் என்பது ஒருபுறமிருக்க, காதல் என்பது பண்டைய காலம் முதல் தொன்று தொட்டு உறவாடி வரும் உணர்வுதான்.

time-read
1 min  |
February 19, 2025
நீயின்றி நானில்லை....
Kanmani

நீயின்றி நானில்லை....

ஒரு அழகான அம்சமான பங்களா! இந்த மாதிரி கடலை பார்த்தபடி இருக்கணும்.' \"நல்ல விஸ்தாரமான பால்கனி! அதில கண்டிப்பா ஊஞ்சல் போட்டிருக்கணும். கூடவே அழகான பூச்செடிகள் இருக்கணும்.''

time-read
2 mins  |
February 19, 2025
உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா?
Kanmani

உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா?

சின்னஞ் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் தின் பண்டம் என்னவெனில் உருளைக்கிழங்கு சிப்ஸை கூறலாம்.

time-read
1 min  |
February 19, 2025
ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்!
Kanmani

ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்!

அந்தக்காலத்தில் மனிதர்களுக்கு கேடெல்லாம் நேரடியாக வந்தது. இப்போது ஆன்லைனில் வருகிறது.விரைவான தகவல் பரிமாற்றத்து க்கு உதவும் ஆன்லைனை மோசடி வேலைகளுக்கு பயன்படுத்துவது இப்போதெல்லாம் அதிகரித்து வருகிறது.

time-read
1 min  |
February 19, 2025
அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..!
Kanmani

அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..!

மக்களிடம் அதீத கெடுபிடி வரி வசூலில் ஈடுபடுவதுதான் இந்திய ஒன்றிய அரசின் முதல் வேலை என்பது மக்களின் மனதில் ஆழப் பதிவாகிவிட்டது. அதிலும் டோல்கேட் கட்டணம் வசூலில் தனி சாதனையே படைத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சுங்க வசூல் சட்டத்துக்கு புறம்பாகவே செய்யப்படுகிறது எனலாம்.

time-read
1 min  |
February 19, 2025
மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா...
Kanmani

மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா...

கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பிரயாக்ராஜ் திரிவேணியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
February 19, 2025
பிரதமர் பதவி...ரேஸில் நடிகை!
Kanmani

பிரதமர் பதவி...ரேஸில் நடிகை!

உலக அரங்கில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், கனடா நாட்டின் பிரதமர் பதவிக்கான ரேஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபி தல்லா களமிறங்கியுள்ளார்.

time-read
1 min  |
February 19, 2025
நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'?
Kanmani

நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'?

இன்று உலகம் முழுவதும் உள்ள பெரும் பிரச்சனை எதுவென கேட்டால் நிச்சயம் தண்ணீர் என்றுதான் கூறுவார்கள். இந்த நிலையில் இந்திய ஒன்றியத்தில் உள்ள 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் 'நைட்ரேட்' அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
February 19, 2025
நான் தம் பிரியாணி மாதிரி!
Kanmani

நான் தம் பிரியாணி மாதிரி!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியாக நடித்து வருகிறார் நடிகை வாமிகா கபி. தமிழில் மாலை நேரத்து மயக்கம், மாடர்ன் லவ் ஆந்தாலாஜி படங்களில் நடித்தவர், தற்போது ரவி மோகனுக்கு ஜோடியாக 'ஜூனி' படத்தில் நடிக்கிறார். அவருடன் ஒரு அழகான உரையாடல்.

time-read
1 min  |
February 19, 2025