வட எல்லை மீட்புப் போராட்டங்களில் ஈடு பட்டார். ஊர் ஊராகப் போய் தமிழ் வளர்த்தார். இந்த தமிழ் மாமுனிவரை தமிழ் இளைய சமுதாயம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அரக்கோணம் அருகே புளியமங்கலம் கிராமத்தில் அய்யாசாமி- பொன்னுரங்கம்மாள் தம்பதியினருக்கு 1895 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பிறந்தார் மங்கலங்கிழார். இவருடைய இயற்பெயர் குப்பன் ஆகும்.
உள்ளூரில் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்தார் குப்பன். மேல் வகுப்பில் சேர்ப்பதற்காக இவரைத் தம்முடன் சென்னைக்கு அழைத்துச் சென்றார்தமக்கை. பச்சையப்பன் பள்ளியில் சேர்க்கப்பட்டார் குப்பன்.
எதிர்பாராத வகையில் தமக்கையின் கணவர் மறையவே, படிப்பை பாதியில் விட்டுவிட்டு வருமானத்துக்காக தச்சுத் தொழிலில் ஈடுபட்டார்.
தமிழ் மீது கொண்டிருந்த அதிகப்பற்றின் காரணமாக, தமிழறிஞர் சேஷாசலம் ஐயர் நடத்தி வந்த இரவு பள்ளியில் சேர்ந்தார். தொடர்ந்து, இலக்கணப் புலி கோவிந்தராசு முதலியாரிடம்தமிழ் இலக்கணம் பயின்றார். தேசப் பெரும் தியாகியும் தமிழறிஞருமான வ.வு.சி.யுடன் நட்பு கொண்டு திருக்குறளின் சிறப்புகளை முழுவதுமாக பயின்றார்.
இவருக்கு தமிழ் மீது இருந்த ஆர்வத்தை கண்ட கோவிந்தராசு முதலியார், கலவை கண்ணன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் இவரை சேர்த்து விட்டார். 15 ஆண்டுகள் இப்பணியை மனதார நேசித்து செய்தார்.
ஊர் மணியக்காரர் ஆக இருந்த தந்தையார் மறைந்து விடவே, இவர் மீது கொண்டிருந்த மரியாதையின்காரணமாக ஊர்மக்கள் இவரை ஊர் மணியக்காரராக பொறுப்பேற்கும்படி கூறினர். இவரை மங்கலங் கிழார் என்று அழைத்தனர்.
அந்தப் பதவியை தமிழ் வளர்ப்பதற்காக நன்கு பயன்படுத்திக் கொண்டார். திருத்தணி சுற்று வட்டார பகுதியில் தமிழ் மொழியை பயன்படுத்து வோர் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பார்த்து வேதனைப்பட்டார்.
Denne historien er fra August 2024-utgaven av Penmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 2024-utgaven av Penmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பழமையான விநாயகர் கோவில்கள்!
புனேயிலிருந்து 27 கி.மீ. தொலைவிலுள்ள தேயூர் என்ற ஊரில் இருக்கும் சிந்தாமணி விநாயகர் கோவில் 100 வருடம் பழமையானது. விநாயகரின் கண்கள், தும்பிக்கை ஆகியவைகளில் நகைகள் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. சக்தி வாய்ந்த கணபதியாக விளங்கும் இவர், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பவர்.
இக்கட்டான நிலையில் இருந்து நாட்டை மீட்ட பொருளாதார மேதை மன்மோகன் சிங்!
இந்திய நாட்டின் தலைமைப்பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், இட்டக்குழுதலைவர், நிதிஅமைச்சர், பிரகம மந்திரி- இவ்வளவு பதவிகள் வகித்தும் \"நேர்மை' என்னும் தம் அடிப்படைப் பண்பில் இருந்து மாறாதவர் டாக்டர் மன்மோகன்சிங்.
அன்பு மலர்கள்!
வாசலில் கால் டாக்சி வந்து நின்று விட்டது. சம்பத் ஷூவை மாட்டிக் கொண்டிருந்தான். சிந்து அவனிடம் வந்து நின்றாள். கண்களில் ஈர மினுமினுப்பு.\"புறப்படட்டுமா.?' என்றான் அவன்.
நுண்ணூட்ட சத்து உணவு வல்லுனர் படிப்பு!
நாள்முழுவதும் உட்கார்ந்த இடத்திலேயே பணியாற்றுதல், வாழ்க்கை முறை சூழல் ஆகியவற்றின் காரணமாக உடல் பருமன் என்பது அதிகரித்து வருகிறது. அதே போல இரண்டு தலைமுறைக்கு முன்பு மாரடைப்பு, இதய நோய் என்பதெல்லாம் வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே வரும் என்றிருந்த காலமும் இப்போது மாறிவிட்டது.
சில்க் நகரம் சூரத்
ஒரு இடத்திறகு நண்பர்களுடனோ, தனியாகவோ அல்லது குடும்பத்தினருடனோ சுற்றுலாவாகச் செல்கையில், அந்த இடத்தி லுள்ள சிறப்பான அம்சங்களைப் பார்த்து ரசிப்பதோடு மட்டுமல்லாமல், 2-3 மணி நேரப் பயணத்திலிருக்கும் மற்றொரு இடத் திற்கும் சென்று அங்கே இருப்பவைகளையும் பார்ப்பது சகஜம்.
அழுதும் தேனும் கலந்த பி.சுசீலாவின் பாடல்கள்!
இந்தியாவின் முன்ன ணி திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலா. தென்னிந்தியாவின் 'இசைக்குயில்' என்றும் மெல்லிசை அரசி' என்றும் இசையரசி எனவும் 'கான கோகிலா' எனவும் 'கான சரஸ்வதி' என்றும் அழைக்கப்படுகிறார்.
பிருகன்னனை
இந்துமதிக்குத் திருமணம் நிச்சயமானதில் வாசுவுக்குப் பெருநிம்மதி. தன்னோடு படிக்கிற முத்துவைக் காதலிப்பதை வாசுவிடம் தான் இந்துமதி முதலில் சொன்னாள். வேறு சாதி என்பதால் அம்மா மறுத்து விடுவாளோ என்கிற பயம் அவளுக்கு இருந்திருக்க வேண்டும்.
இசைக் கலைஞர்களுக்கு தளராத மனம் வேண்டும்! பரதநாட்டியக் கலைஞர் கலா ஸ்ரீனிவாசன்
சண்முகா ஆர்ட்ஸ் எனும் அமைப்பை கடந்த 15 ஆண்டு களாக நடத்தி வருபவரும், உலக நடன தினத்தன்று தன்னுடைய 23 மாணாக்கர்களை வைத்து நடனமாடச் செய்து India Book; Asia Book; World Book ஆகிய மூன்று புத்தகங்களில் இடம்பெறச் செய்தவரும், செட்டாநகர் திருமுருகன் கோவிலில் 50 வருட காலத்துக்கும் மேலாக செயலாளராகவும் பணிபுரிந்து வரும் முருக பக்தர் பி. எஸ். சுப்பிரமணியம் அவர்களின் புதல்வியுமாகிய திருமதி கலா ஸ்ரீனிவாசன், பெண்மணிக்கு அளித்த பேட்டி:
வேடிக்கை ஆகிப்போன அரசரின் ஆணை!
அக்பர் தன் மகளை ஓர் அரசக் குமாரனுக்கு திருமணம் செய்து வைத்தார். அன்புடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டையும் சச்சரவும் ஏற்பட்டுவிட்டது.
வினைதீர்க்கும் விநாயகன்!
விநாயகனே வினைதீர்ப்பவனே.. வேழ முகத்தோனே.. ஞான முதல்வனே.