
புவிசார் அரசியல், வரலாறு, சூழலிலியல் மற்றும் சமூகம் தொடர்பான கட்டுரைகள் என்று இவர் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தைக் கொண்டுள்ளார். இதுவரை 'உலகப் போர்களும், ஐரோப்பிய வரலாறும்', ‘யூரோடெக்', 'ஐரோப்பிய புராணங்களும் அசட்டுத்தனமான நம்பிக்கைகளும்' என்ற மூன்று புத்தகங்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த ஆண்டு புத்தக கண்காட்சியை ஒட்டி ‘வதை முகாம்களின் சொல்லப்படாத வரலாறு! ஹிட்லர் யூதர்கள் மற்றும் யுத்தங்கள்' என்ற தொகுப்பு வெளிவந்துள்ளது.
உங்களுடைய 'வதை முகாம்களில் சொல்லப்படாத வரலாறுகள்' பற்றி சில வார்த்தைகள்?
இதற்கு முன்பு வெளியான மூன்று புத்தகங்களுமே விகடனில் தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்ற
கட்டுரைகளின் தொகுப்புகள் ஆகும். ஆனால், இந்த 'வதை முகாம்களின் சொல்லப்படாத வரலாறுகள்! ஹிட்லர் யூதர்கள் யுத்தங்கள்’ படைப்பை, நேரடி புத்தகமாக கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில், சுவாசம் பதிப்பகத்தின் மூலம் புதிய எழுத்தாக்கமாக வெளியிடுகிறோம்.
இந்த வரலாற்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட நாட்களாக எனக்குள் இருந்து வந்தது. எந்தவொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு என்று கூறுவார்கள். ஆகவே, நமக்கு தெரிந்த வரலாற்றிற்கு, தெரியாத பக்கங்களும் இருக்கும். பெரும்பான்மை வரலாறு என்பது யார் எழுதுகிறார்களோ, அவர்களுக்கு சாதகமாகத்தான் அமைகிறது.
ஹிட்லர் மாதிரியான எத்தனையோ கொடூரமான சர்வாதிகாரிகள் இந்த உலகத்தில் இருந்துள்ளனர். ஆனால், இன்றைக்கு வரையிலும் ஏன் இவர் மட்டும் அவ்வளவு கொடூரமான சர்வாதிகாரியாக அடையாளப் படுத்தப்படுகிறார் என்பதைப் பற்றிய ஒரு விரிவான அலசல் இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும்.
ஹிட்லரைப் பற்றி அதிகம் சொல்லப்படாத கதைகளை தேடிப் படித்தபோது, ஏன் அவருடைய ஒரு பக்கத்தை மட்டுமே இந்த உலகத்திற்கு காட்டுகிறார்கள் என்று கேள்வி எழுந்தது. அதேபோன்று இந்த கதையை மையமாக கொண்டு, தமிழில் அதிகமான புத்தகங்கள் வந்ததில்லை என்றதால், இந்த தமிழில் எழுத வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.
Denne historien er fra Thanga Mangai January 2025-utgaven av Thangamangai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra Thanga Mangai January 2025-utgaven av Thangamangai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

பட்டை குறியீடு (பார்கோடு)
பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.

தவறுகளும், மாற்றங்களும்..
லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..

எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.

பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.

மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.

எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.

கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!
மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது.

உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமம்தான், ஆசிரியையும், எழுத்தாளருமான ரம்யா அருண்ராயன் அவர்களின் சொந்த ஊராகும். தற்போது, கோவை மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.