மோடி அரசின் சாதனை?

அதனால்தான் நம் முன்னோர்கள் கடன் வாங்குவதை தவிர்க்கச் சொன்னார்கள்.
ஆனாலும், இன்றைய நவீன உலகில் நுகர்வு வெறியினால் கை நிறைய சம்பாதித்தாலும், சம்பாதிக்காவிட்டாலும் பை நிறைய ஏதாவது பொருட்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அப்படி நுகர்வு பொருட்களை நிறைத்துக் கொண்டே இருக்கும் ஒரு இல்லத்தில்... அவையெல்லாம் நேரடியாக பணம் கொடுத்து வருவதில்லை. இ.எம்.ஐ. எனப்படும் மாதத் தவணை முறையில் தான் பெரும்பாலானோர் பொருட்களை கடன் வாங்குகின்றனர். அது ஒவ்வொரு மாதத்திற்கும் நம்மை கடனாளி ஆக்குகிறது. நாம் வாங்கும் சம்பளத்திற்கு, நம் உரிமையை விட பிறர் உரிமை அதிகம் ஆகிவிடுகிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியாவில் சம்பாதிக்கும் தனிநபர்கள் மாத சம்பளத்தில் 33 சதவீதத்துக்கும் அதிகமான தொகையை இ.எம்.ஐ-க்காக செலவிடுகிறார்கள் என்ற உண்மையை அண்மையில் வந்த ஆய்வு ஒன்று தெளிவுபடுத்துகிறது.
'இந்தியா எவ்வாறு செலவழிக்கிறது ?' என்ற தலைப்பில் நுகர்வோரின் நடவடிக்கைகளை ஆராய்ந்து இந்த ஆய்வு முடிவு வெளி வந்திருக்கிறது.
சுமார் 54% மக்கள் விவசாயத்தையே சார்ந்துள்ள இந்தியாவில், நிதி ஆயோக்கின் அறிக்கையின்படி, சுமார் 53% விவசாயிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். 58% விவசாயிகள் பசி, பட்டினியுடன் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சுமார் 4.70 கோடி குடும்பங்கள் கடனில் தவிக்கின்றன. 12.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களை செலுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
இந்தியா முழுவதும், மூன்றாம் அடுக்கு நகரங்கள் முதல் பெருநகரப் பகுதிகள் வரை, மாதத்திற்கு ரூ.20,000 முதல் ரூ.1,00,000 வரை வருமானம் ஈட்டும் பல்வேறு மக்கள் தொகைப் பிரிவுகளை சேர்ந்த 30 லட்சத்திற்கும் மேற்பட்ட நுகர்வோரிடம் விரிவாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைப்படி, நுகர்வோரின் மொத்த செலவினங்களில் 39% கட்டாய செலவினங்களுக்குச் செல்கிறது. அதைத் தொடர்ந்து 32% தேவைகளுக்கும் 29% விருப்பப்படியான செலவினங்களுக்கும் செல்கிறது. விருப்பச் செலவினங்களில் 62% ஃபேஷன் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களுக்காக செலுத்தப்படுகிறது.
Dit verhaal komt uit de March 12, 2025 editie van Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen
Dit verhaal komt uit de March 12, 2025 editie van Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen

நடிகைகளின் கர்ப்பகால போட்டோசூட்?
வீட்டுல ஏதாவது விசேஷமா... தலைக்கு குளிச்சு எவ்வளவு நாள் ஆச்சு? என இலை மறை காயாக பெண்களின் கர்ப்பம் பற்றி தெரிந்து கொண்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது.

அமெரிக்கா மிரட்டல் பணிந்ததா இந்தியா ?
அண்மையில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மோடி விஜயம் செய்தபோது, அவர் அமர வசதியாக நாற்காலியையே நகர்த்திக்கொடுத்தார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். அப்படி, வாஷிங்டனில் வலயவந்த, நம் மோடியை பார்த்து யாராவது அமெரிக்கவுக்கு அடிபணிபவர் என்று சொல்ல முடியுமா?

இது சோஷியல் மீடியா ஸ்டார் காலம்!
‘லைகர்' படத்தின் மூலம் தென்னக சினிமாவில் நுழைந்த அனன்யா பாண்டே, பாலிவுட்டில் இப்போது முன்னணி நடிகை.

அதிக நேர வேலை... பறிபோகும் தூக்கத்தால் பாதிக்கும் மனநலம்!
இன்றுள்ள பரபரப்பான உலகில் நேரம், காலம் என்பதை மறந்து வேலை வேலை என ஓட வேண்டிய நிலைமை. இதனால் பலரும் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

நான் ரொம்ப லக்கி!
அழகிப் பட்டம் வென்ற பல் மருத்துவரான மீனாட்சி சவுத்ரி நீச்சல், பேட்மிண்டன் வீராங்கனையாக பன் முகத்திறன் கொண்டவர்.

தங்க கடத்தல் ...
தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்... 'அயன்' பட சூர்யா போல அலட்டிக் கொள்ளாமல் தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ், இப்போது 'நான் ஒரு அப்பாவி, என்னை திட்டம் போட்டு மாட்டி விட்டுட்டாங்க' என்று நீதிமன்றத்தில் அழுது புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

மணலில் அமிலத்தன்மை...என்ன செய்யும்?
மண்ணிலிருந்து உற்பத்தியாகும் தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் போன்றவற்றை சார்ந்தே மனிதன் வாழ்கிறான்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சிறுதானிய உணவுகள்...!
இம்மாதம் 21-ஆம் தேதி பனிப்பாறைகள் தினமாகும்.

கலர் கலர் உள்ளாடைகள்...கவனம்!
உள்ளாடை அழகு என்பது ஒருபுறம் இருக்க அது ஆபத்து என்பது மறுபுறம் இருக்கிறது. நாம் சௌகரியத்துக்காக அணியும் உள்ளாடைகள், உடற்பயிற்சி பனியன்களால் பல்வேறு சிரமங்கள் உருவாகலாம் என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லவ் டுடே
சுப்புலட்சுமி பெண்கள் கல்லூரி பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.. பட்டாம்பூச்சிகளாய் இளம்பெண்கள் கூட்டம் கூட்டமாய் திரிந்தனர்.