1958-ல் பி.டி.ஜாட்டி முதலமைச்சரானார். அவர் 1958-ஆம் ஆண்டு மே மாதம் 16-ஆம் தேதி முதல் 1962-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் தேதி வரை முதலமைச்சராக பதவி வகித்தார். பிற்காலத்தில் துணை ஜனாதிபதியாகவும் பி.டி.ஜாட்டி உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.டி.ஜாட்டியை தொடர்ந்து எஸ்.ஆர்.காந்தி முதலமைச்சரானார். அவர் 1962-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி வரை 99 நாட்கள் மட்டுமே முதலமைச்சராக பணியாற்றினார். இதன்பிறகு மீண்டும் முதல்வரான சித்தவனஹள்ளி நிஜலிங்கப்பா 1968-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி வரை பதவி வகித்தார்.
நிஜலிங்கப்பா தேசிய அரசியலுக்குச் சென்றதையடுத்து வீரேந்திரப்பட்டீல் முதலமைச்சரானார். அவர் 1971-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18-ஆம் தேதி வரை முதல்வராக செயல்பட்டார்.
இதற்கிடையே காங்கிரஸ் பிளவுபட்டதால் கர்நாடகாவிலும் குழப்பம் மேலோங்கியது. அங்கு ஜனாதிபதி ஆட்சி பிரகடனப் படுத்தப்பட்டது.
1973-ஆம் ஆண்டு, இந்திரா காங்கிரசைச் சேர்ந்த தேவராஜ் அர்ஸ் முதல்வரானார். அவரைத் தொடர்ந்து குண்டுராவ் முதலமைச்சரானார்.
இதுவரை காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் ஆகியவை மட்டுமே அதிகார பீடத்தில் ஆதிக்கம் செலுத்தின. 1983-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்றது. கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட ராமகிருஷ்ண ஹெக்டே 1983-ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். அவரது பெயர் தேசிய அளவிலும் பிரபலமடைந்தது.
1988-ல் சோமப்ப ராயப்ப பொம்மை முதலமைச்சரானார். தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் தந்தை தான் சோமப்ப ராயப்ப பொம்மை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. 1989-ல் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப் படுத்தப்பட்டது.
1989-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வீரேந்திர பட்டீல் மீண்டும் முதலமைச்சரானார். அவரது ஆட்சி 1990-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீடித்தது.
கர்நாடகாவில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து மறுபடியும் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்பட்டது.
This story is from the April 12, 2023 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the April 12, 2023 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விருப்பமும் திணிப்பும்!
அண்மையில் ஒரு மருத்துவ மாநாட்டிற்கு சென்று வந்தாள் என் தோழி. அங்கு வந்த ஒரு மருத்துவர், நல்லா இருக்கீங்களா? எங்க ஒர்க் பண்றீங்க? என்று நலம் விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். தோழிக்கு அவரை நினைவில் இல்லை.
இணையங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபாச விளம்பரங்கள்!
இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இணையம், மொபைல் என பொழுதைக் கழிக்கின்றனர். இணையத்தில் சமூக வலைதளம் மூலம் நல்ல விசயங்கள் வரிசை கட்டி வந்தாலும் ஆபாசங்களுக்கும் பஞ்சமில்லை.
ஒலிம்பிக் ஹீரோக்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.
உன்னை நானறிவேன்,
“ரெடியா..?” \"இல்லயில்ல, இன்னும் கொஞ்சம் பொறுங்க.'' \"மணி இப்பவே பத்து ஆச்சுதியா.' தலையை குலுக்கிக் கொண்டபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து ஒரு காலை மடக்கி, மறுகாலை தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் அக்னீஸ்வர்.
நான்ஸ்டிக் சமையல்...கவனம்!
மண்பாண்ட சமையல் என்பது பாரம்பரியம் மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.
நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, மயோசிடிஸ் எனும் விசித்திரமான சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
மோடி அரசின் இந்தி,திணிப்பு...
அண்மையில் ஆங்கிலேயர் ஒருவர் சென்னை நகர வீதியில் நின்று, கடைப்பெயார்ப் பலகைகளை சுட்டுக்காட்டி, 'சென்னையின் முதன்மை மொழி தமிழ். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி.
ரகு தாத்தா
இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் நாயகி, தன் திருமணத்தை நிறுத்த இந்தி பரீட்சை எழுத வேண்டிய சூழல் வர,அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
திங்கலான்
தன் இன மக்களை அடிமை வாழ்வில் இருந்து மீட்பதற்காக போராடும் நாயகன், கோலார் தங்க வயலைத் தேடி செல்லும் பயணம் தான் படத்தின் கதை.
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.