'கோட்' திரைப்படம் பெரிய அளவில் வசூலைக் குவித்திருக்கிறது. திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே படத்தைப் பற்றி பெரிய பில்ட்அப் கொடுத்து, படத்தை தயாரித்த கல்பாத்தி அகோரம் கம்பெனி 600 கோடிக்கு படத்தை விற்பனை செய்திருக்கிறது.
தமிழ் திரையுலகின் அசைக்கமுடியாத ஒரு நடிகராக வலம்வரும் விஜய், தமிழகம் மட்டுமன்றி, மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஈர்த்து வைத்துள்ளார். நீண்ட நாட்களாக அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தாலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் கட்சியை தொடங்கினார். நடிகர் விஜய் கட்சி அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களின் கவனமும் அவர் மீது திரும்பியது. அரசியலில் ஈடுபட்டு வரும் பல கட்சிகள் விஜய் நமக்கு ஆதரவளிப்பாரா என்று எதிர்பார்த்திருந்த நிலையில்... அவரே ஒரு கட்சியை ஆரம்பித்திருப்பது பெரும் ஆச்சரியத்திற்கு உரியதாக மாறிவிட்டது.
அவர் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே மாநில அளவிலான மாபெரும் மாநாட்டை நடத்த திட்டமிட்டு, அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியது... அரசியல் கட்சி தலைவர்களுக்கு அடுத்த அதிர்ச்சியைத் தந்தது. சமீப காலமாக விஜய் எந்த மேடையில் பேசினாலும், மாநில உரிமைகள் குறித்தும், நீட் தேர்வு குறித்தும், வருகின்ற 2026 தேர்தலை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பது குறித்தும் தான் பேசுகிறார்.
இந்நிலையில், தன்னுடைய முதல் மாநாட்டை திருச்சியில் நடத்தலாம் எனத் திட்டமிட்ட விஜய், மதுரை, சேலம் என பல மாவட்டங்களில் மாநாடு நடத்துவதற்கான மைதானம் கிடைக்கவில்லை. இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்து செப். 23 ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்று தேதியும் அறிவிக்கப்பட்டது.
இந்த மாநாட்டின் பணிகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னின்று செய்துவரும் நிலையில், மாநாட்டிற்கான அனுமதி பெறவேண்டி விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.
This story is from the September 07 - 10, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 07 - 10, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார்.
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்?
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?
\"பூதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்.
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல் நடத்தணும்ல.
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்.
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இடம்பெற்ற மன்னிப்புக் கேட்கும் வீடியோவில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.