'நேர்மை, நாணயத்தைப் பற்றி நீங்க எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கூவத்தூரில் நடந்தது அலங்கோலம்' என எடப்பாடி பழனிசாமியையும் அ.தி.மு.க.வையும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறாரே பா.ஜ.க. மா. தலைவர்?
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன பிறகு அவரை தேடிச் சென்று கிடந்தது பா.ஜ.க. தான். கூவத்தூரில் நடந்ததெல்லாம் அப்ப தெரியவில்லையா? சசிகலாவை முதலமைச்சராக்கவிடாமல் செய்தது, ஓ.பி.எஸ்.ஐ கையில் வைத்திருந்தது என எல்லா கீழ்த்தரமான செயலையும் செய்தது பா.ஜ.க. உங்கள் தூண்டுதல் இல்லாமல்தான் ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தினாரா? தலைமைச் செயலகம் வரை ரெய்டு நடத்தி, அமைச்சர்களையெல்லாம் கையில் எடுத்தது யார்? பீலா ராஜேஷ் பீகாருக்கு செல்ல வேண்டியவர், அவரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தது யார்? ஓ.பி.எஸ். அணியில் மாஃபா பாண்டியராஜனை சேரச்சொன்னது யார்? இங்க இருந்த பா.ஜ.க. மாநிலத் தலைவரும், மத்திய அமைச்சரும் இந்த மாநிலத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். யாரையுமே செயல்பட விடவில்லை. தினகரன் கூட சென்ற 18 எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழக்க எவ்வளவு துரிதமாக பா.ஜ.க. செயல்பட்டது. தி.மு.க. அவ்வளவு பிரச்சினை செய்தும், மெஜாரிட்டி இல்லாமல் எடப்பாடி ஆட்சி தொடர காரணம் யார்? அப்பெல்லாம் பா.ஜ.க.வுக்கு தெரியவில்லையா?
இதைவிட பெரிய கூத்து 2019ல் மோடி வேட்பு மனுத்தாக்கலின்போது எடப்பாடி பழனிசாமி வர மறுத்தார் எனச் சொன்னதுதான். இந்த விசயம் இவருக்கு எப்படி தெரியும் என்றால், எடப்பாடியுடன் நெருக்கமாக இருக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்தான் மா. தலைவரிடம் சொல்லியிருக்கிறார். உங்க கிட்ட மணிகள் இருக்கிறார்கள். அவர்களிடமே கேட்டுப்பாருங்கள் என்கிறார். மோடி தோற்கப்போகிறார் அதற்கு எதற்கு நான் வேட்பு மனு தாக்கலுக்கு போகணும் என எடப்பாடி சொன்னதாக இது நாள் வரை மா. தலைவருக்கு தெரியவில்லை இப்போதுதான் சொல்லியிருக்கிறார்கள். அதனை பிடித்துக்கொண்டார் மா. த.
This story is from the September 07 - 10, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 07 - 10, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார்.
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்?
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?
\"பூதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்.
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல் நடத்தணும்ல.
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்.
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இடம்பெற்ற மன்னிப்புக் கேட்கும் வீடியோவில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.