மருமகளிடம் அத்துமீறல்...கருக்கலைப்பு...-அ.தி.மு.க. நிர்வாகி டார்ச்சர்!
Nakkheeran|October 26-29, 2024
வீட்டுக்கு வந்த இளம் மருமகளிடம் பாலியல் அத்துமீறலிலும், கட்டாயக் கருக்கலைப்பிலும் ஈடுபட்டுக் கொடுமைப்படுத்திய தூத்துக்குடி மாநகரின் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவாகியிருக்கிறது.
ப.இராம்குமார்
மருமகளிடம் அத்துமீறல்...கருக்கலைப்பு...-அ.தி.மு.க. நிர்வாகி டார்ச்சர்!

தூத்துக்குடியின் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். வடபகுதி பகுதிச் செயலாளர். ஒட்டுமொத்த குடும்ப நபர்கள் மீதும் அந்த கேப்பிட்டல் கிரிமினல் வழக்கு பதிவாகியிருக்கிறது.

பொன்ராஜின் மகன் கவிராமுக்கும் நகரின் சிவந்தாக்குளம் பகுதியைச் சேர்ந்த மணிராஜ் என்பவரின் மகள் திவ்யதர்ஷினிக்கும் கடந்த 10.12.2023 அன்று திருமணமானது. பொன்ராஜின் மகன் ஹோட்டல் வைத்திருப்பவர். ஆசிரியை பயிற்சி முடித்துவிட்டு தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாக இருப்பவர் திவ்யதர்ஷினி.

மணிராஜையும் அவரது மகள் திவ்யதர்ஷினியையும் அவர்களின் இல்லத்தில் சந்தித்தபோது தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையையும், சித்ரவதையையும் தந்தை விவரித்தார்.

"புரோக்கர் ஒருவர் மூலமா பொன்ராஜ் மகன் கவிராமை பற்றித் தெரிந்து, ஜாதகம் பார்த்து திருமணத்தை நடத்தினோம். எங்களுக்கு ஜாதகம் பார்க்கிற பழக்கமெல்லாம் கெடையாது, மனப்பொருத்தத்தை மட்டுமே பார்த்துக்குவோம்னு சொன்னார் பொன்ராஜ். என்னோட ரெண்டு மகள்களையும் 100 பவுன் நகை போட்டு சிறப்பா கல்யாணம் முடிச்சுவைச்சேன் அதமாதிரி என் வீட்டுக்கு வர்ற மருமகளும் அந்தளவுக்கு நகை, ரொக்கத்தோட வரணும்னு சொல்லி அழுத்தினார் பொன்ராஜ். ஒரே பெண் என்பதால் வரதட்சணையாக 80 பவுன் நகை, 10 லட்சம் ரொக்கம், சீர்வரிசையா 7 லட்சம் மதிப்புள்ள பொருட்களைக் கொடுத்தோம்.

திருமணத்திற்குப் பின் தென்காசியிலிருக்கும் தன் சகோதரியின் வீட்டிற்கு மனைவியுடன் சென்ற கவிராம், அங்கு ஓரிரு நாட்களிருந்துவிட்டுத் திரும்பிவந்தனர். அதற்கு இரண்டு நாள் பின்னர்தான் அந்தச் சம்பவம். 10.01.2024 அன்று மாலை கணவர் கவிராமும் அவரது தாய் லீலாவதியும் வெளியே சென்றிருந்த நேரத்தில் இரவு 10.30 மணிக்கு என் மகள் தனது அறையின் படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கிட்டிருந்தா. அப்ப வீட்டிலிருந்த மாமனார் பொன்ராஜ், திவ்யதர்ஷினி அறைக்குள் நுழைந்தவர் அவளைப் பார்த்து ரசித்ததோடு தன் நிலை பற்றி துளியும் யோசிக் காமல் திவ்யதர்ஷினியிடம் அத்துமீறி சீண்டலில் ஈடுபட்டிருக்கார்.

This story is from the October 26-29, 2024 edition of Nakkheeran.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the October 26-29, 2024 edition of Nakkheeran.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM NAKKHEERANView All
கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!
Nakkheeran

கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!

டெல்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் 'கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' என்று சொல்லி விட்டு பா.ஜ.க. வை ஆட்சி யமைக்கத் தேர்ந்தெடுக்குகிறார்கள்.

time-read
2 mins  |
February 12-14, 2025
ஆன்மிகப் பாதை!
Nakkheeran

ஆன்மிகப் பாதை!

ரஜினிக்காக பல நாட்கள் சிந்தித்து ஒரு வசனத்தை உருவாக்கினேன். அதை அடித்தளமாக, அஸ்திவாரமாக வைத்துத்தான் 'தனிக்காட்டு ராஜா'வின் கதையை எழுதினேன்.

time-read
2 mins  |
February 12-14, 2025
கைது பயத்தில் சீமான்!
Nakkheeran

கைது பயத்தில் சீமான்!

'ஹலோ தலைவரே, மீண்டும் அதிரடியாக 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி யிருக்கிறது தமிழக அரசு.\"

time-read
3 mins  |
February 12-14, 2025
கைதி எண் 9658
Nakkheeran

கைதி எண் 9658

(21) உணவுப் பஞ்சமும் உளுத்த சோளமும்!

time-read
2 mins  |
February 12-14, 2025
தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!
Nakkheeran

தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முகமாக தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸை துவக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரெங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர்.

time-read
2 mins  |
February 12-14, 2025
வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!
Nakkheeran

வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!

\"எங்கள் அரசியல் கோட்பாடுகள் சரியென்று பட்டால் வாக்கு தாருங்கள்... அல்லது அவர்களுக்கே தாருங்கள்! எங்களை ரோட்டில் போட்டீர்கள்...

time-read
2 mins  |
February 12-14, 2025
முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !
Nakkheeran

முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !

சுமார் 9,368 கோடி மதிப்பிலான திட்டங்களையும், பணிகளையும் நெல்லை மாவட்டத்திற்கு அர்ப்பணிக்கிற வகையிலும், கள ஆய்விற்காகவும் இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

time-read
1 min  |
February 12-14, 2025
அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?
Nakkheeran

அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தலாம் என்பது பற்றி பரிந்துரை செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் மூவர் கொண்ட கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

time-read
2 mins  |
February 12-14, 2025
5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!
Nakkheeran

5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!

அ.தி.மு.க. தனது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை வேகமாக நடத்திவருகிறது. கடந்த 9ஆம் தேதி ஒரு தொலைக்காட்சியில் அறிவிப்பு ஒன்று திடீரென வெளியானது.

time-read
2 mins  |
February 12-14, 2025
மாவலி பதில்கள்
Nakkheeran

மாவலி பதில்கள்

நீ முடியும்னு நினைச்சா முடியும்... நீ முடியாதுனு நினைச்சா முடியாது... அவ்வளவுதான் வாழ்க்கை எல்லாம் நீயே தான்...

time-read
2 mins  |
February 12-14, 2025