சென்னை மாநகரில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலையை தொடர்ந்து, முக்கிய சாலைகளாக ஓஎம்ஆர் மற்றும் இசி.ஆர் சாலைகள் உள்ளன. இந்த சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, சென்னையில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி உடன் இணைக்கும் முக்கிய சாலையாக (மா.நெ.49) இசி.ஆர் உள்ளது.
சென்னையில் இருந்து இசிஆர் சாலைக்கு செல்ல வேண்டுமானால் திருவான்மியூர் தான் இசிஆர் சாலையின் நுழைவுப் பகுதியாக உள்ளது. இங்கு சாலை மிக குறுகியதாக உள்ளதால் திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலையை கடப்பது வாகன ஓட்டிகளுக்கு ஒரு சவாலாக உள்ளது.
எனவே, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், தற்போது இசிஆர் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை, திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கி.மீ. தூரம் கொண்டது. இடத்தை பொறுத்து, 60 முதல் 80 அடி வரை அகலத்தில், நான்கு வழிச்சாலையாக உள்ளது. மேலும் 17 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. எனவே, சாலையை கடக்க வழக்கமாக சுமார் 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை ஆகிறது. நாளொன்றுக்கு 69,000 வாகனங்கள் செல்கின்றன. ஆனால் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயரும்.
கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த கலைஞர் சாலை விரிவாக்க அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2012ம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து, முதல்கட்ட நிலம் எடுப்பு பணிக்காக ரூ.940 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இசிஆர் விரிவாக்க பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், சாலைகளின் கீழ் இருபுறமும் மீண்டும் தோண்டாதவாறு குடிநீர் வாரியம், மின் வாரியம், மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பணிகள் இருந்தால் அவற்றை உடனடியாக செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
This story is from the September 20, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 20, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சர்வாதிகார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற் குழு கூட்டம் சென்னை சதியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது.
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
துரைப் பாக்கம் மற்றும் முகப்பேர் பகுதிகளில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை
வீட்டு வாசலில் போதையில் தூங்கி கொண்டிருந்த மீன் வியாபாரி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மது ஒழிப்பு என்பது கொள்கை வழிப் போராட்டம்
திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் பேச்சு
துப்பாக்கியால் மிரட்டி, கல் வீசி தாக்கி மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமீமஸ்வரத்தில் மிணா(ும் பதற்றம்
பிரச்னை... பிரச்னை... பிரச்னை...
'தமிழக பாஜவில் 2 மாதங்களுக்கு பெரிய நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று மேலிடத்தில் உத்தரவிட்டுள்ளனர். பிரச்னை, பிரச்னை என்று பிரச்னை செய்யாதீர்கள்' என்று தமிழிசை கூறினார்.
பதிவுத் துறையில் 15 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்
வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவநீத் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நிர்வாக மாவட்ட பதிவாளர் சந்தானம் ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளர் செந்தில்குமார் சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளர் கல்பனா திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளர் புனிதா செங்கல் பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், செங்கல்பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளர் அறிவழகன் மயிலாடுதுறை நிர்வாக மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த ₹300 கோடி எங்கே?
₹40 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய மின் மாற்றிகள்
கிருஷ்ணசாமி எம்எல்ஏ இயக்கி வைத்தார்
ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
2 டன் 150 கிலோ பறிமுதல்