சென்னை, அக்.4: சென்னையில் 63,246 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த திட்டத்துக்காக தனது பங்கை ஒன்றிய அரசு விரைவில் விடுவிக்கும்.
சென்னையில் தற்போது விம்கோ நகர் முதல் பணிமனை சென்னை விமான நிலையம் வரையிலான நீல வழித்தடம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலான பச்சை வழித்தடம் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன.
இவை இரண்டும் சென்னை மெட்ரோ முதல் கட்ட திட்டத்தின் கீழ் வருகின்றன. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை யிலான ஊதா வழித்தடமும், பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான காவி வழித்தடமும், மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையிலான சிவப்பு வழித்தடமும் அமைக்க திட்டமிடப்பட்டது. 2017ம் ஆண்டு இத்திட்டத்தை ஒரு ஒன்றிய திட்டமாகவே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.
This story is from the October 04, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 04, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
சென்னை அடுத்த பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள மற்றும் அறிவியல் கல்லூரியின் கணக்கியல் மற்றும் எஸ்.ஏ. கலை நிதித்துறை, பின்டெக்கிளப் மற்றும் இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளை 'குவாண்டம் குவாசர் 2.0' என்ற தலைப்பில் நடத்தின.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள்
பூந்தமல்லி ஒன்றியம், அகரம் மேல் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு பள்ளி குழுமம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
செடிகொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரி
பராமரிப்பு இல்லாமல் செடி கொடிகள் வளர்ந்து குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டில் 137வது தசரா விழா தொடங்கியது
செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவு 137வது தசரா விழா துவங்கியது.
ஆர்.எம்.கே.வி சார்பில் 11 தனித்துவ அடையாளங்களுடன் புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்
ஆர்.எம்.கே.வி நிறுவனம் கடந்த நூறாண்டுகளாக தனித் துவமிக்க 100 புடவைகள் க்கு மேல் அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த வருடம் மேலும் 11 புத்தம் புதிய தனித்துவமான அடையாளங்களோடு உருவாக்கப்பட்ட புடவைகளை அறிமுகப்படுத்துகிறது.
காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்ற தந்தை, மகன் கைது
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுத்திட மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவிட்டார்.
உலக வெறி நோய் தினத்தையொட்டி செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்
உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வண்டலூரில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு அடி-உதை
போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிடும் பெண்ணுக்கு அடிஉதை விழுந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்
மாம்பாக்கம் சாலையில் செயல்படாத சிக்னல்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.