![முடங்கும் லாரி தொழில் முடங்கும் லாரி தொழில்](https://cdn.magzter.com/1711436984/1730598342/articles/rQN4GEkuL1730631943607/1730632000553.jpg)
உணவுப்பொருட்களில் துவங்கி, பெரிய இயந்திரங்கள் வரை எல்லா வகையான பொருட்களையும் கொண்டுசெல்ல லாரி தொழில் முக்கியமானதாக உள்ளது. இந்திய அளவில் 68 லட்சம் லாரிகள் இயங்குகிறது. இத்தொழிலில் 10 கோடிக்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் உள்ளன. இங்கு 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு காலத்தில் மிக லாபகரமான தொழிலாக இருந்த லாரித்தொழில், தற்போது கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் தொகை, ஜி.எஸ்.டி வரி, சுங்க கட்டணம், டீசல் விலை, விபத்து நஷ்டஈடு என பல வகையிலும் இத்தொழிலுக்கு தொடர் நெருக்கடி ஏற்படுகிறது. ஒரு பக்கம் சாலை போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்ய, இன்னொரு பக்கம் லாரி தொழில் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கி நிற்கிறது.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின்-தமிழ்நாடு தலைவர் தனராஜ் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு லாரிக்கு கிளீனராக வருபவர்கள் படிப்படியாக லாரியை ஓட்ட கற்றுக்கொண்டு டிரைவராக பணியாற்றுவார்கள். தற்போது கிளீனருக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லாரி டிரைவருக்கு போதிய வருமானம் இல்லாமல் மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். மற்ற தொழிலுக்கு வட மாநிலங்களில் இருந்து வருவார்கள். ஆனால், லாரி தொழிலுக்கு மட்டும் யாரும் வருவதில்லை. இதனால் லாரி இயக்குவதில் டிரைவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சில நேரங்களில் லாரிக்கு லோடு கிடைத்தாலும், டிரைவர் இல்லாததால் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. வரி மேல் வரி, அபராதம், டீசல், உதிரிபாகம் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி காரணமாக இத்தொழிலில் கடுமையான தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. லாரி தொழிலை சார்ந்துள்ள லாரி புக்கிங் ஆபீஸ், டயர் வல்கனைசிங், பெயிண்டிங், ஒர்க்ஷாப், பஞ்சர் தொழில் என எல்லா உபதொழில்களும் முடங்கிவிட்டன. மிக முக்கியமாக தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் 71 ஆயிரத்து 389 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
This story is from the November 03, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 03, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/BF3Uc5jZY1739772170097/1739772289925.jpg)
திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு
திருவொற்றியூர், மணலி பகுதிகளில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் புதைவடமாக மாற்றப்பட்டுள்ளது.
பாமாயில் விலை உயர்வு
விருதுநகர் மார்க்கெட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, பாமாயில் கடந்த வாரம் ரூ.2,130க்கு விற்கப்பட்டது.
![மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/-y3OhSx6F1739770918825/1739770946543.jpg)
மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை
திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மும்மொழி கொள்கை மோசடி, ஏமாற்றும் கொள்கை. தாய்மொழி கொள்கை தான் உலகத்தில் தலை சிறந்த கொள்கை.
பட்டியல் சமூக மாணவியை காலில் விழ வைத்து கொடுமை
கோவில்பட்டியில் மாணவியை சக மாணவி காலில் விழ வைத்த தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓ காட் பியூட்டிஃபுல் டைட்டில் டீசர் ரிலீஸ்
பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கும் படம், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’.
![புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/iGI6kOxpH1739770946913/1739770999397.jpg)
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி
நாம் தமிழர் கட்சியின் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று அவிநாசியில் நடைபெற்றது.
![விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/Hdc6FaK5U1739772488764/1739772530968.jpg)
விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு
கர்நாடக மாநிலம் பெருங்களூருவைச் சேர்ந்தவர் சுமன் அஸ்வின் (22). இவர், 3ம் ஆண்டு பொறியியல் பட்டய கல்வி படித்து வருகிறார்.
திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் இலவச மருத்துவ முகாம்
திருவள்ளூரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தொழுநோயாளிகளுக்கு கால் புண்ணுக்கு சிகிச்சை அளித்ததுடன், 40 பேருக்கு கட்டு கட்டும் வகையில் சுய பாதுகாப்பு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டன.
![துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/kFJ0F9DTn1739773072916/1739773119643.jpg)
துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி
துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லையைச் சேர்ந்த தந்தை – மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நிதி கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்பதா? தமிழ்நாட்டை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம் - ஒன்றிய அரசுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
நிதி உரிமையை கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்பதா? என்றும், தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம் என்றும் ஒன்றிய அரசை உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.