
கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோர பகுதிகளிலும், அந்தமான் தீவு கூடங்களிலும் இக்காடுகள் வளர்கின்றன. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியது. முத்துப்பேட்டை பகுதியில் 12,020 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இக்காடுகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கோடியக்கரை கிழக்கு வரை நீண்டுள்ளது.
இங்கு அலையாத்தி, நரிகண்டல், கருங்கண்டல், நீர்முள்ளி, தீப்பரத்தை மற்றும் சுரபுன்னை போன்ற 6 வகையான தாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அலையாத்தி மரம் முதன்மையானது. மொத்த சதுப்புநில தாவரங்களில் எண்ணிக்கையால் 95 சதவீதத்திற்கு மேலாக இது காணப்படுகிறது. அலையாத்தி மரங்கள் ஓதநீர் வாய்க்கால்கள் மற்றும் உப்புத்தோட்டத்தின் கரையோரங்களில் அழகாக வரிசையாக காணப்படுகின்றன. முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் மூன்று பெரும் பிரிவுகளாக காணப்படுகின்றன. தொடக்க பகுதி தில்லை மரங்களும், நடுப்பகுதயில் நரிகண்டல் மரங்களும் இறுதியாக அலையாத்தி மரங்களாக காணப்படுகின்றன. நன்கு வளர்ந்த உயரமான அலையாத்தி மரங்கள் இப்பகுதியில் அதிகமாக உள்ளது.
1970க்கு முன் கருங்கண்டல், நெட்டை சுரபுன்னை, குட்டை சுரபுன்னை போன்ற மரங்கள் அதிக அளவில் காணப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அந்த மரவகைகள் தற்பொழுது மாயமானதற்கு சரியான காரணத்தை கூற முடியவில்லை என்று வனத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த காடுகள் அமைந்துள்ள லகூன் என்ற காயல் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டின் அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை பல்வேறு வகை நீர்ப்பறவைகள் வருகின்றன. மொத்தத்தில் 147 சிற்றின வகை பறவைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிக அதிகமாக பூநாரை, கூளக்கடா, நீர்காகம், ஊசிவால் வாத்து, குளத்து கொக்கு, வெண்கொக்கு போன்றவை வருகின்றன.
This story is from the December 08, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 08, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

அய்யப்பன்தாங்கலில் இருந்து குமணன்சாவடிக்கு மீண்டும் மினி பஸ்
அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

மாதம் முழுவதும் உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஆணழகன் டி.ஆர். திலீபன் ஏற்பாட்டில் மாதம் முழுவதும் அறுசுவை உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கும் விழா நடந்தது.

வீராணம் தண்ணீர் வரும் ராட்சத குழாயில் உடைப்பு
சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வீராணம் குழாய் புதுப்பாக்கம் அருகே திடீரென உடைந்தது.

ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல்
பக்தர்கள், பொதுமக்கள் அவதி

சென்னை நீர்நிலைகள் பாதுகாப்பாக உள்ளன
சென்னையில் உள்ள நீர்நிலைகளில் நச்சுத்தன்மை இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், நீர்நிலைகள் பாதுகாப்பாக உள்ளன என்றும் மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களிடம் பணியாளர்கள் கெடுபிடி
அநாகரிக பேச்சால் முகம்சுழிப்பு

பிரியங்கா படம் விருது வெல்லுமா...
லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3: அகாடமி விருதுகள் என்ற ஆஸ்கர் விருது விழாவில், உலகம் முழுவதும் வெளியான மிகச்சிறந்த படைப்புகள் மற்றும் சிறந்த கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக பல பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொறியாளர்களுக்கான பயிற்சி பட்டறை
வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது
பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலைய பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒன்றிய அரசை கண்டித்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டம்
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க நிர்ப்பந்தம், இந்தி திணிப்பு, கல்வி நிதி தராதது, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சித்து அநீதி இழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதி தோறும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார்.