பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினரில் முற்படுத்தப்பட்டோருக்கு (இடபிள்யுஎஸ்) கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்ப ளித்தது.
அமர்வில் இடம்பெற்றிருந்த 5 நீதிபதிகளில் 3 பேர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும், மற்ற இருவர் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தீர்ப்பளித்தனர்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினரில் முற்படுத்தப்பட்டோருக்கு அரசுக் கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் 103-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு 2019ஆம் ஆண்டில் இயற்றியது. அதன் காரணமாக ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தைக் கடந்தது.
இது இந்திரா சாஹ்னி வழக்கில் (மண்டல் வழக்கு) உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் உள்ளதால், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் சார்பில் மாநில உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதி மன்றத்திலும் மொத்தம் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று அந்த மனுக்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. சமூக-கல்வி ரீதியில் பின்தங்கியுள்ளோருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரச் சூழலை அடிப்படையாகக் கொண்டு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு மனுக்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டி ருந்தது.
Esta historia es de la edición November 08, 2022 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 08, 2022 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
6 பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷியா உத்தரவு
தங்கள் நாட்டில் உளவு பாா்த்ததாகக் கூறி, பிரிட்டன் நாட்டைச் சோ்ந்த ஆறு தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற ரஷியா உத்தரவிட்டுள்ளது. கியொ் ஸ்டாா்மா்.
ஐஸ்லாந்து, செக் குடியரசை வீழ்த்தியது இந்தியா
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ஆவது சுற்றிலும் ஓபன், மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வெற்றி பெற்றன.
அதானி குழும பிரதிநிதிக்கு சொந்தமான ரூ.2,610 கோடி முடக்கம்
அதானி குழுமத்தின் பிரதிநிதியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பண முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக தைவானைச் சோ்ந்தவரின் ரூ.2,610 கோடியை ஸ்விட்சா்லாந்து முடக்கியுள்ளது.
இந்தியாவின் கருத்துகளை கேட்க தயாராக இருங்கள்: ஜெய்சங்கர்
‘இந்தியாவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து மற்ற நாடுகள் கருத்து தெரிவிப்பதால் கவலையில்லை.
சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்
சேத்தியாதோப்பு -விக்கிரவாண்டி வழியாக சென்னை செல்லும் புறவழிச்சாலையில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் சரிசெய்யப்பட்டு, விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும் என்றாா் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரி.
சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும்
மாநிலங்களில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டுமென நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு நீதிமன்றத்தில் ஆஜர்
அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப் பாவு, சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார்.
தொண்டர்களின் நியாய உணர்வுக்கு மதிப்பளிப்பேன்
தொண்டா்களின் குரலில் ஒலிக்கும் நியாயமான உணா்வுக்கு மதிப்பளிப்பேன் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று விநாயகர் சிலை கரைப்பு
சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை (செப்.14) விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் அதிநவீன கருவி
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய்களை முழுமையாக குணப்படுத்தக்கூடிய ரூ.2.76 கோடியிலான அதிநவீன கருவியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.