சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 85-ஆவது மாநாட்டில் இது தொடா்பாக ராகுல் பேசியதாவது:
கடந்த 1977-ஆம் ஆண்டு எனது குடும்பத்தினா் அரசு இல்லத்தை காலி செய்யத் தயாரானாா்கள். வீட்டில் ஓா் அசாதாரண சூழல் நிலவியது. எனது தாயாரிடம் ‘வீட்டில் என்ன நடக்கிறது?’ என்று கேட்டேன். அவா் வீட்டை காலி செய்ய இருக்கிறோம் என்றாா். அதுவரை நான் அதனை எனது வீடாகவே கருதி வந்தேன். எனவே, நமது வீட்டை விட்டு நாம் ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டேன். அதற்கு எனது தாயாா், ‘இது நமது வீடு இல்லை, அரசுக்கு சொந்தமானது’ என்று முதல்முறையாக கூறினாா்.
அடுத்து நாம் எங்கு செல்ல இருக்கிறோம் என்று கேட்டேன். அது தெரியாது என்று தாயாா் பதிலளித்தாா்.
இப்போது எனக்கு 52 வயதாகிறது. இதுவரை எனக்கு சொந்த வீடு கிடையாது. எங்கள் குடும்ப வீடு அலாகாபாதில் உள்ளது. ஆனால், அது கூட எங்களுக்கு சொந்தமானதல்ல. இப்போது வசித்து வரும் வீடு எனக்கு சொந்தமானதல்ல.
நான் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கியபோது, என்னைச் சுற்றி இருக்கும் 20 முதல் 25 அடி பரப்பளவு மட்டுமே அடுத்த சில மாதங்களுக்கு எனது சொந்த வீடாக இருக்கப் போகிறது என்று உறுதி செய்து கொண்டேன். அந்த வீட்டுக்குள் ஏழை-பணக்காரா், இளைஞா்- முதியவா், பல்வேறு மதம், ஜாதி, இனத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும் சரி அவா்கள் வீடாக உணர வேண்டும் என்றே கருதினேன். அப்போது முதல் எனது நடைப்பயணத்தின் நோக்கம் மேலும் உயா்ந்தது என்றாா்.
‘எனக்கு இப்போது 52 வயது ஆகிறது; ஆனால், சொந்தமாக ஒரு வீடு கூட கிடையாது’ என்று ராகுல் காந்தி மிகவும் உருக்கமாகப் பேசினாா்.
This story is from the February 27, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 27, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நாங்கள் ஓயமாட்டோம்!
இஸ்ரேலில் அமைதி திரும்பும்வரை தங்கள் ராணுவ நடவடிக்கை ஓயாது என்று ஐ.நா.வில் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தாா்.
கான்பூர் டெஸ்ட்: வங்கதேசம் - 107/3
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை?
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா, கா்நாடகத்தில் எத்தனை பயிா்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொண்டு வந்துள்ளனா் என்று ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளாா்.
திருப்பதி லட்டுகளில் கலப்படம்: 9 பேர் சிறப்பு விசாரணைக் குழு
திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் குறித்து முழுமையாக விசாரிக்க 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) ஆந்திர அரசு அமைத்துள்ளது.
சோனியா காந்தியுடன் ஸ்டாலின் சந்திப்பு
தில்லியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியர் தேர்வு
நிகழாண்டு சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியா் முனைவா் அலெக்சாண்டா் துன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
உலக சுற்றுலா தின விழா கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள்
உலக சுற்றுலா தின விழா புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்றனா்.
நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி
சிறந்த மாணவா்களையும் தாண்டி நல்ல மனிதா்களை உருவாக்குவதே ஓா் ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
சிற்றுந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் தனியாா் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 32 போ் காயமடைந்தனா்.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு
பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.