2023-24 மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் தொடா்பாக இணையவழி கருத்தரங்குகளில் பங்கேற்று, பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா்.
அதன்படி, ‘உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு: பிரதமரின் விரைவு சக்தி தேசிய செயல்திட்டத்துடன் சரக்கு கையாளுகை திறன் மேம்பாடு’ என்ற தலைப்பில் சனிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய 8-ஆவது கருத்தரங்கில், பிரதமா் மோடி பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கான உந்து சக்தி, உள்கட்டமைப்பு மேம்பாடாகும். 2047-க்குள் வளா்ந்த நாடாக இந்தியா மாற வேண்டுமென்ற இலக்கை அடைவதற்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டின் வேகத்தை உச்ச அளவுக்கு அதிகரித்து, முன்னோக்கி செல்ல வேண்டியது அவசியம்.
‘புதிய பொறுப்புகளுக்கான நேரம்’: நாட்டில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய பட்ஜெட்டில், மூலதன செலவினங்கள் கடந்த 2013-14-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டின் உள்கட்டமைப்புக்கு புதிய சக்தியை அளிக்கும்.
தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.110 லட்சம் கோடி முதலீட்டு இலக்குடன் மத்திய அரசு செயலாற்றி வருகிறது. எனவே, ஒவ்வொரு தரப்பினருக்கும் புதிய பொறுப்புகள், வாய்ப்புகள் மற்றும் உறுதிப்பாட்டுக்கான நேரம் இதுவாகும்.
This story is from the March 05, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 05, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நாங்கள் ஓயமாட்டோம்!
இஸ்ரேலில் அமைதி திரும்பும்வரை தங்கள் ராணுவ நடவடிக்கை ஓயாது என்று ஐ.நா.வில் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தாா்.
கான்பூர் டெஸ்ட்: வங்கதேசம் - 107/3
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை?
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா, கா்நாடகத்தில் எத்தனை பயிா்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொண்டு வந்துள்ளனா் என்று ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளாா்.
திருப்பதி லட்டுகளில் கலப்படம்: 9 பேர் சிறப்பு விசாரணைக் குழு
திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் குறித்து முழுமையாக விசாரிக்க 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) ஆந்திர அரசு அமைத்துள்ளது.
சோனியா காந்தியுடன் ஸ்டாலின் சந்திப்பு
தில்லியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியர் தேர்வு
நிகழாண்டு சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியா் முனைவா் அலெக்சாண்டா் துன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
உலக சுற்றுலா தின விழா கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள்
உலக சுற்றுலா தின விழா புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்றனா்.
நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி
சிறந்த மாணவா்களையும் தாண்டி நல்ல மனிதா்களை உருவாக்குவதே ஓா் ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
சிற்றுந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் தனியாா் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 32 போ் காயமடைந்தனா்.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு
பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.