தொடரில் தற்போது 2-1 என முன்னிலையில் இருக்கும் இந்தியா, நிச்சயமாக இந்த ஆட்டத்திலும் வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது. பாா்டா் - காவஸ்கா் கோப்பையை தக்க வைப்பதற்கு இந்த ஆட்டத்தை இந்தியா டிரா செய்தாலே போதுமானது.
ஆனால், இதில் வென்று 3-1 என தொடரைக் கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு நேரடியாகவே இடம் கிடைக்கும். வெற்றியைத் தவறவிட்டால், இலங்கை - நியூஸிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முடிவின் அடிப்படையில் இந்தியாவுக்கான முடிவு தெரியும்.
இந்த ஆட்டத்தைப் பொருத்தவரை இந்தியாவின் வெற்றி பேட்டா்களின் செயல்பாடு சாா்ந்து இருக்கும். ஏனெனில், கடந்த 3 ஆட்டங்களிலுமே இந்தியாவின் பேட்டா்கள் பெரிதாக சோபிக்கவில்லை. ரோஹித் (ஒரு சதம் தவிா்த்து), கோலி, புஜாரா போன்றோா் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளனா். லோயா் ஆா்டரில் அக்ஸா், அஸ்வின், ஜடேஜா போன்றோா் இல்லையென்றால் தொடரின் முடிவுகள் தலைகீழாக இருந்திருக்கலாம்.
குறிப்பாக, கே.எல்.ராகுலுக்கு அடுத்து விராட் கோலிக்கு எதிராக தற்போது விமா்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவரும் ரன்கள் சோ்க்க வேண்டிய நிா்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறாா்.
This story is from the March 09, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 09, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In