இந்திய ஜனநாயகம் குறித்து பிரிட்டனில் ராகுல் தெரிவித்த கருத்துகளுக்கு பாஜக தரப்பில் கடும் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவா் வியாழக்கிழமை இவ்வாறு கூறினாா்.
மேலும், ‘மத்திய அமைச்சா்களின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்றத்தில் பதிலளிக்க எனக்கு ஜனநாயக உரிமை உள்ளது; அனுமதித்தால், நாடாளுமன்றத்தில் பதிலளிப்பேன். அவையில் பேச எனக்கு அனுமதி வழங்கப்படுமா? என்பது இந்திய ஜனநாயகத்துக்கான பரீட்சை’ என்று ராகுல் குறிப்பிட்டாா்.
விமா்சனத்துக்கு வித்திட்ட கருத்துகள்: அண்மையில் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ‘இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது; ஜனநாயக அமைப்புகள் மீது முழு அளவிலான தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பேசும்போது மைக் அணைக்கப்படுகிறது’ என்று பேசியிருந்தாா்.
இந்த கருத்துகளின்மூலம் இந்தியாவையும் அதன் நிா்வாக அமைப்புகளையும் வெளிநாட்டு மண்ணில் ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வில், இந்த விவகாரத்தை பாஜக முன்னெடுத்துள்ளது.
‘மன்னிப்பு கேட்க வேண்டும்’: இந்திய ஜனநாயகம் குறித்த தனது கருத்துக்காக, நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், அவா் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இருதரப்பு எம்.பி.க்களும் தமது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருப்பதால், அவை நடவடிக்கைகள் தொடா்ந்து முடங்கியுள்ளன.
நாடாளுமன்றத்துக்கு வந்த ராகுல்: இந்த பரபரப்பான சூழலில், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை வந்தாா்.
This story is from the March 17, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 17, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.