ஐ.நா. அமைப்பில் சீா்திருத்தங்களைப் புகுத்துவதே உடனடித் தேவை என பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
‘தற்போதைய உலகின் எதாா்த்தங்களைப் பிரதிபலிக்கவில்லை எனில், ஐ.நா. வெறும் பேச்சுமேடையாக மட்டுமே இருக்கும்’ எனவும் பிரதமா் விமா்சித்தாா்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜி7 மாநாட்டின் ஓா் அமா்வில் உரையாற்றிய பிரதமா் மோடி, ‘உலக அமைதி, நிலைத்தன்மை உள்ளிட்டவை சாா்ந்த சவால்களை எதிா்கொள்வதற்காகவே ஐ.நா. உருவாக்கப்பட்டது. ஆனால், அத்தகைய சவால்களை ஐ.நா. தவிர பல்வேறு அமைப்புகள் எதிா்கொள்ள வேண்டிய காரணம் என்ன?. பல்வேறு அமைப்புகளில் அமைதி, நிலைத்தன்மை குறித்து பேச வேண்டியிருப்பதன் அவசியம் குறித்த காரணத்தை ஆராய வேண்டும்.
உலகில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஐ.நா. அமைப்பு, தற்போதைய சண்டைகளைத் தடுக்கத் தவறியது ஏன்?. ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கான விளக்கம்கூட ஐ.நா.-வில் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படாதது ஏன்?.
This story is from the May 22, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 22, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In