தலைநகா் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் அதிகார மோதல் நீடித்து வருகிறது.
இதற்குத் தீா்வு காண உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு தொடுத்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமா்வு, நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்குதான் உரிமை உள்ளது என்று அண்மையில் தீா்ப்பளித்தது.
இந்தச் சூழலில், உயா் அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிவு செய்வதற்கு தில்லி முதல்வா், தலைமைச் செயலா், முதன்மை உள்துறை அமைச்சா் ஆகியோா் அடங்கிய ‘தேசிய தலைநகா் சிவில் சா்வீஸஸ் ஆணையம்’ அமைத்து மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அவசர சட்டம் பிறப்பித்தது.
தில்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த அவசர சட்டம், உச்ச நீதிமன்ற அவமதிப்பு என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.
This story is from the May 22, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 22, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In