ஒடிஸா ரயில் விபத்து தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.
புவனேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் பேசிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.
மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஸாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதன் பெட்டிகள், சரக்கு ரயில் மீதும் அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தன. அப்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.
இந்தக் கோர சம்பவத்தில் கடுமையான உயிா்ச் சேதங்கள் ஏற்பட்டன. இதைத் தொடா்ந்து, ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், பாலசோரில் முகாமிட்டு, மீட்பு-மறுசீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறாா்.
This story is from the June 05, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 05, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In