மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் எந்தவொரு சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாத வகையில் உறுதி செய்ய வேண்டும் என்று காவல் துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல் துறையும், அரசின் அனைத்துத் துறைச் செயலா்களும் முழுமையான ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும். ஓா் அரசு நல்லரசாகச் செயல்படுவதற்கு சட்டம்- ஒழுங்கு முறையாக நிலைநிறுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு இன்று அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்கு முக்கியக் காரணம், சட்டம்-ஒழுங்குக்கு கொடுத்து வரும் முக்கியத்துவம்தான். சட்டம் ஒழுங்கை முறையாக கடைப்பிடித்து வருகிறோம் என்பதன் அடையாளம்தான் கடந்த இரு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களாகும்.
நெருங்கும் மக்களவைத் தோ்தல்: நிம்மதியும் அமைதியும் இருக்கும் மாநிலத்தில்தான் நினைத்த திட்டங்களைச் செயல்படுத்த முடியும். அந்த வகையில், இரண்டாண்டு காலம், மிக மிக நிறைவான காலமாக அமைந்துள்ளது. காவல் துறையின் செயல்பாடுகள் மிக மிக திருப்திகரமாக உள்ளது. அடுத்து வரும் ஓராண்டு காலம் மிக முக்கியமானதாகும்.
இந்தக் காலத்தில் காவல் துறையின் செயல்பாடுகள் சிறப்பாக அமைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் கண்டறியப்பட்டவுடன், அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவை மக்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையில் பெரிய நிகழ்வுகளாக மாறுவதைத் தவிா்க்க வேண்டும்.
This story is from the July 12, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 12, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தேங்கிய மழை நீரை விரைந்து வெளியேற்றிய மாநகராட்சி
சென்னை மற்றும் புகா் பகுதியில் புதன்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீா் தேங்கியது.
சென்னையில் அக்.6-இல் விமான சாகச கண்காட்சி
ஏற்பாடுகள் தீவிரம்
சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு
நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் ஜாமீன்
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
மத்திய அரசு மீது ராகுல் சாடல்
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.