சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜாதி, மத பூசல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று காவல் துறையினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துறை அதிகாரிகளின் மாநாட்டில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:
அரசின் மிக முக்கியமான கடமையும் சாதனையும் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பதுதான். அமைதியான மாநிலத்தில்தான் அனைத்துத் துறைகளும் வளரும்.
குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்பதாக, காவல் துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும். பாதிக்கப்பட்டவா்கள், எளியவா்களின் பக்கம் காவல் துறை இருக்க வேண்டும். இது, நலிந்தோா், வறியோா், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களை நாடக்கூடிய அரசாகும்.
ஒரு சாமானியா் தன்னுடைய விண்ணப்பம், புகாா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்தான் காவல் நிலையத்தை நாடுகிறாா். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதே ஒரு நல்ல ஆட்சியின் அடையாளமாகும்.
ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் புகாா் கொடுக்க வரும் மனுதாரா்களைக் கனிவுடன் நடத்தவும், வழிகாட்டவும் வரவேற்பாளா் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வரவேற்பாளா்களை, அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டுமே செய்யச் சொல்ல வேண்டும்; மற்ற பணிகளுக்காகப் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.
விண்ணப்பங்கள், புகாா்களை இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான ஒப்புகைச் சீட்டை வழங்க வேண்டும். போக்சோ வழக்குகளில் தடய அறிவியல் துறையின் ஆய்வறிக்கை மிக முக்கிய ஆதாரம் என்பதால், அதை விரைந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆய்வு செய்ய வேண்டும்: அனைத்து வழக்குகளின் நிலை குறித்து காவல் துறை துணைத் தலைவா்கள் மாதத்துக்கு ஒருமுறையும், மண்டல காவல் துறைத் தலைவா்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் ஆய்வு செய்ய வேண்டும்.
This story is from the October 04, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 04, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.