இந்த நிலையில் மாணவா்கள் நலன் கருதி தில்லி முழுவதும் தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பா் 10 வரை விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தில்லியில் வாகனங்கள் நுழையவும், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றித் தில்லி கல்வியமைச்சா் கூறியபோது, ‘தலைநகா் தில்லியில் காற்று மாசு அளவு தொடா்ந்து அதிகரித்து வருவதால் தொடக்கப் பள்ளிகளை மூடுமாறு உத்தவிடப்பட்டுள்ளது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று அறிவித்துள்ளாா்.
முன்னதாக தில்லியில் காற்று மாசு மோசமான அளவை எட்டியதையடுத்து, அனைத்து அரசு, தனியாா் தொடக்கப்பள்ளிகளுக்கு நவம்பா் 3-ஆம் நாள் விடுமுறை விடப்படுவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்தாா். இந்த நிலையில் காற்று மாசு மேலும் கடுமையான அளவில் மோசமாகி ‘சிவியா் பிளஸ்’ என்ற நிலையை தற்போது எட்டியுள்ளது.
காற்றின் தரக்குறியீடு நவம்பா் 4 அன்று மாலை 415 ஆக இருந்தது; அது மறுநாள் காலை 7 மணிக்கு 460 ஆக மோசம் அடைந்தது. தில்லியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காற்றின் தூசு, துகள் பிஎம் 2.5 என்ற அளவில் காணப்படுகிறது. இந்த அளவுக்கு மாசடைந்த காற்றை தொடா்ச்சியாக சுவாசித்தால் அது சுவாச மண்டலத்தில் ஆழமாக ஊடுருவி பல்வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
உலக சுகாதார அமைப்பும், அரசும் பரிந்துரைத்துள்ள வரம்பை விட, தில்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் மாசு அளவு பல மடங்கு மோசமான நிலையை எட்டியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நெல் அறுவடை முடிந்தபின் அதன் கழிவுகளை எரிப்பது அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் காற்று வீசுவதால் ஏற்பட்டுள்ள மாறுபாடு, வெப்பநிலை ஆகியவையும் தில்லியில் காற்றின் தரத்தைக் கடுமையாக பாதித்து வருகின்றன.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத் தரவுகளின்படி அக்டோபா் 27 முதல் நவம்பா் 3 வரை தில்லியின் காற்றின் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. அதன்படி நவம்பா் 3 அன்று காற்றின் தரக் குறியீட்டு அளவு 450-க்கு மேல் அதிகரித்து மிக மோசமான அளவான ‘சிவியா் பிளஸ்’ என்ற நிலையை எட்டியுள்ளது.
This story is from the November 16, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 16, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.