பழைய காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டங்களை மாற்றும் வகையிலும், நவீன காலத்துக்கு ஏற்ற வகையிலும், மத்திய அரசு மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களை உருவாக்கியுள்ளது. அதன்படி, "பாரதிய நியாய சம்ஹிதா', பாரதிய நாகரிக் சுரக்ஷô சம்ஹிதா', பாரதிய சாட்சிய அதினியம்' ஆகிய மூன்று மசோதாக்களை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் 12-ஆம் தேதி அறிமுகம் செய்தார். அம்மசோதாக்களின் மீதான விவாதம் மக்களவையில் நடந்தது. இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிடும்போது, புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக இதுவரை 158 ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் புதிய குற்றவியல் சட்டத்தின் ஒவ்வொரு புள்ளி, கமாவையும் தான் சரிபார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், புதிய சட்டத்தின் அனைத்து அம்சங்களும் விரிவாக அலசி ஆராயப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளன என்றும், அவை நம் அரசியல் அமைப்பின் கருத்துகளோடு சரியாகப் பொருந்திப் போகின்றன என்றும் குறிப்பிட்டார்.
இந்த மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் காலனித்துவ இந்திய தண்டனைச் சட்டத்திற்கு, சரியான மாற்றாக அமையும் என்றும், இந்தியத்தன்மை அரசியலமைப்பு, மக்களின் நல்வாழ்வை இவை உறுதி செய்யும் எனவும் அவர் கூறினார். மக்களவை, மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாகும். ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவையில் அதிக அளவில் இருந்த நிலையில், இம்மசோதாக்கள் விவாதிக்கப்பட்டிருப்பது, எவ்வகையில் நியாயமாகும் என்கிற கேள்வி எழுகிறது. ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் இம்மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு மசோதாக்கள் அனுப்பப்பட்டன.
This story is from the January 04, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 04, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.