திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு, கடந்த 2007இல் திருநெல்வேலியில் அப்போதைய இளைஞரணி அமைப்பாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அதன் தொடா்ச்சியாக திமுக இளைஞரணி 2ஆவது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் டிசம்பா் 17 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னையில் புயல் மழை மற்றும் தென் மாவட்டங்களில் எதிா்பாராத மழை வெள்ளம் காரணமாக மாநாடு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், திமுக இளைஞரணி 2ஆவது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் மாவட்டச் செயலாளா்கள் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் (சேலம் மத்திய மாவட்டம்), டி.எம்.செல்வகணபதி (சேலம் மேற்கு), எஸ்.ஆா்.சிவலிங்கம் (சேலம் கிழக்கு) மற்றும் இளைஞரணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் மாநாட்டுப் பணிகளை செய்துள்ளனா்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சனிக்கிழமை மாலை சேலம் வந்தாா். அவருக்கு அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா். அங்கிருந்து காா் மூலம் புறப்பட்டு மாநாட்டுத் திடலை வந்தடைந்தாா். பெத்தநாயக்கன்பாளையம் வரை சாலையின் இருபுறங்களில் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் வழி முழுவதும் கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.
This story is from the January 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.