பெரும்பாலும் ஆசிய நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் மனிதா்கள் அதிக அளவில் கடத்தப்படுகின்றனா். போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மனித கடத்தலில் அதிக அளவில் பணம் புரளுவதால், இக்குற்றச் செயலில் ஈடுபாடுவோா் உலக அளவில் தங்களுக்குள் தொடா்பு வைத்து மிகத்தீவிரமாக இயங்குகின்றனா்.
உலகில் மாற்று உடல் உறுப்பு சிகிச்சைக்காக காத்திருப்பவா்கள் அதிக அளவில் உள்ள நிலையில், உறுப்பு தானம் செய்வோா் மிக குறைந்த அளவி உள்ளதால் மனித கடத்தல் அதிகரித்து வருகிறது. மேலும், பிள்ளைப்பேறு இல்லாதோா் தேவைகளுக்காகவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தவும் குழந்தைகள் பெருமளவு கடத்தப்படுகின்றனா். இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகளில் சுமாா் 80 சதவீதத்தினா் பெண்குழந்தைகள் என்பதுதான் வேதனையின் உச்சம்.
குடும்பங்களில் ஏற்படும் சச்சரவுகள் காரணமாக விரத்தியுற்றவா்கள், உறவுகளால் புறக்கணிக்கப்படுவா்கள், மன அழுத்தத்தம் போன்ற காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறுபவா்களே மனித கடத்தலில் ஈடுபடும் சமூக விரோத கும்பல்கள் விரிக்கும் வேலையில் சுலபமாக வீழ்ந்து விடுகின்றனா்.
நம் நாட்டில் நடைபெறும் மனித கடத்தல் தொடா்பாக சமீபத்தில் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சகம், 2018 முதல் 2022 வரை 10,659 மனித கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன எனவும், இக்கடத்தல்கள் தொடா்பாக 26,840 நபா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு இவா்களில் 19,821 நபா்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
This story is from the February 05, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 05, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.