‘நாட்டின் வளா்ச்சிக்கு தனித்தன்மை வாய்ந்த வலுவான எரிசக்தித் துறை அவசியம்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
கோவாவின் கடற்கரை நகரமான பெதுலில், ‘இந்திய எரிசக்தி வாரம் - 2024’-ஐ பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், அவா் பேசியதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.5 சதவீதத்தை தாண்டியது. இந்தியாவின் வளா்ச்சி விகிதம் உலகளாவிய வளா்ச்சி மதிப்பீட்டைவிட அதிகமாக உள்ளது.
இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று உலகப் பொருளாதார நிபுணா்கள் நம்புகின்றனா். இந்தியாவின் வளா்ச்சி வரலாற்றில் எரிசக்தித் துறையின் பங்கு முக்கியமானது.
எரிசக்தித் துறையில் எரிவாயுவின் தற்போதைய பங்கை 6.3 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயா்த்தும் பரந்த இலக்கின் அடிப்படையில், எனது அரசு துறைசாா் சீா்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இது, உள்நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
2070-ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய காா்பன் உமிழ்வு இலக்கை எட்டும் பயணத்தில், இயற்கை எரிவாயு முக்கிய எரிபொருளாக விளங்குகிறது. மின்சாரம், உர உற்பத்தியிலும், வாகனம்-சமையல் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படும் எரிவாயு, இதர புதை படிம எரிபொருள்களை ஒப்பிடுகையில் குறைந்த அளவே மாசை ஏற்படுத்துவதாகும்.
Bu hikaye Dinamani Chennai dergisinin February 07, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin February 07, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.