தமிழக அரசு தயாரித்து அளித்த உரையை சட்டப் பேரவையில் படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவிபுறக்கணித்தார்.
இதைத் தொடர்ந்து, அவரது உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.
அனைத்தும் நீக்கம்: உரையில் இடம்பெற்றிருந்த திருக்குறள் மற்றும் அதற்கான விளக்கத்தை மட்டுமே படித்த ஆளுநர், அதன்பின்பு சில கருத்துகளைக் கூறி அமர்ந்தார். அச்சிடப்பட்ட உரையைத் தவிர்த்து, ஆளுநர் தெரிவித்த கருத்துகள், அதற்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்த மறுப்புரைகள் என அனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
தயாரிக்கப்பட்ட உரைகள் மட்டும்...: ஆளுநருக்காக தயாரிக்கப்பட்ட ஆங்கிலம் மற்றும் தமிழ் உரைகள் மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறுவதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டு அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பேரவைக் கூட்டம்: புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன், பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (பிப்.12) காலை தொடங்கியது. பேரவை வளாகத்துக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதன்பிறகு, சரியாக காலை 9.59 மணிக்கு பேரவை மண்டபத்துக்கு ஆளுநர் அழைத்து வரப்பட்டார். அவரை பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.
குறளுடன் தொடக்கம்: ஆளுநர், பேரவைத் தலைவர் ஆகியோர் தங்களது இருக்கைகளை வந்தடைந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதன்பின், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழில் பேசி அனைவரையும் வரவேற்றார். அவர் பேசியது:-
This story is from the February 13, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 13, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.