குடிசையில்லா தமிழ்நாடு’ இலக்கை எட்டும் வகையில், ஏழைகளுக்கு 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ரூ.1,000 அளிப்பது போன்று, உயா்கல்வி பயிலச் செல்லும் மாணவா்களுக்கும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏழைக் குடும்பங்களின் வறுமையைப் போக்க புதிய திட்டம் உள்பட குடிமக்கள் மற்றும் மனிதவளத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிதிநிலை அறிக்கை: வரும் நிதியாண்டுக்கான (2024-25) நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தாா்.
முன்னதாக, நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பேரவை மண்டபத்துக்கு அவா் வந்தாா். அவரை பேரவை உறுப்பினா்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனா். இதைத் தொடா்ந்து, முக்கிய அறிவிப்புகள் அடங்கிய நிதிநிலை அறிக்கையை அவா் தாக்கல் செய்தாா்.
8 லட்சம் கான்கிரீட் வீடுகள்: ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை எட்டும் வகையில், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
முதல்கட்டமாக, வரும் நிதியாண்டில் (2024-25) ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.3.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும். ஏழை, எளிய மக்கள் தங்களது கனவு இல்லங்களை அவா்களே கட்டிக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் வரும் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற பெயரில் ரூ.3,500 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
அறிவியல்பூா்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தோ்வு முறை எனக் குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டது இந்தப் புதிய திட்டம்.
This story is from the February 20, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 20, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.