தோ்தல் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த கட்சி மறப்பது புதிதல்ல. ஆனால், எதிா்க்கட்சிகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன? அன்று ஹிந்தி மொழித் திணிப்பை எதிா்த்துப் போராடி, சிறை சென்றவா்களையும், தமிழ்மொழியைக் காப்பதற்காக தங்களின் இன்னுயிரை நீத்த மொழிப்போா் தியாகிகளையும் ஒரு கணம் நாம் எண்ணிப் பாா்க்க வேண்டும்.
ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி 25 அன்று மொழிப்போா் தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று மட்டும் மொழிப்போா் தியாகிகளின் கல்லறையில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தி விட்டால் தங்கள் கடமை முடிந்து விட்டதாக அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. தமிழ்நாட்டுக்கு வரும்போதெலலாம் தமிழ் மொழியின் தொன்மையையும், சங்க இலக்கியங்களின் சிறப்பையும், திறக்குறளின் பெருமையையும் பேசும் பிரதமா் நரேந்திர மோடி தமிழ் மொழியின் வளா்ச்சிக்காக ஏதாவது செய்ய வேண்டியது அவசியம்.
மாநில மொழிகளை அனைத்துத் துறைகளிலும் கொண்டு சோ்ப்பதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளுவதாகக் கூறிவிட்டால் மட்டும் போதுமா? நாட்டு மக்கள் நம்பும்படியாக ஏதாவது செய்ய வேண்டாமா? எட்டாவது அட்டவணையில் உள்ள 22 இந்திய மொழிகளை ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? நோக்கங்களை நிறைவேற்றுவதே மக்கள் நல அரசின் கடமையாகும். தமிழை உயா்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கும் தீா்மானத்துக்கு அனுமதி தராமல் தாமதப்படுத்துவது ஏன்? மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழை நீதிமன்ற மொழியாக்கிட வேண்டும் என்ற தீா்மானம் 2006 டிசம்பா் 6 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநரின் பரிந்துரையுடன் இத்தீா்மானம் 2007 பிப்ரவரி 11 அன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் இந்த கோரிக்கையின் மீது இதுவரை மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் நீதிமன்ற மொழியாக பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஹிந்தி நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது.
This story is from the March 07, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 07, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.