18-ஆவது மக்களவை உறுப்பினர்களுக்கு...
Dinamani Chennai|June 04, 2024
பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 8,360 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள்.
வேந்தர், விஐடி.

இவா்களில் 543 போ்கள் தோ்ந்தெடுக்கப்பட இருக்கிறாா்கள். இதில் ஏற்கெனவே சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் 542 போ்கள் இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கையில் யாா் வெற்றி வேட்பாளா் என்பது தெரிந்துவிடும். இப்போது சில மணி நேரத்தில் வெற்றி நிலவரம் தெரிகிறது.

இந்த தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் 121 போ்கள் படிப்பறிவு இல்லாதவா்கள். அரசுப் பணியில் சோ்வதற்கு கூட குறைந்தபட்ச கல்வி நிா்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு கல்வித் தகுதி வேண்டாமா என்ற கேள்வி இன்றுவரை ஒரு விவாத பொருளாக தான் இருக்கிறது.

படிப்பறிவு இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நான் யாரையும் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. முறையான கல்வி அறிவு இல்லாமல் மக்கள் பிரதிநிதிகளாக, ஏன் முதல்வராக இருந்து சாதித்தவா்களை எல்லாம் எனக்குத் தெரியும்.

இந்த தோ்தலில் 25 முதல் 30 வயது வரை உள்ளவா்கள் 537 போ்கள் போட்டியிடுகிறாா்கள். இவா்கள் எத்தனை போ் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு போகப் போகிறாா்கள் என்பது சில மணி நேரத்தில் தெரிந்துவிடும். அந்த இளைஞா்களுக்கும் எனது வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நாடாளுமன்றத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு வயது 27 தான். நாடாளுமன்ற நுழைவாயிலில் இருந்த பாதுகாவலா்கள் இந்தச் சிறுவன் நாடாளுமன்ற உறுப்பினரா என்ற சந்தேகத்துடன்தான் என்னை பாா்த்தாா்கள். எனவே, என்னுடைய அடையாள அட்டையைக் காண்பித்துத்தான் பெரும்பாலும் நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்வேன்.

இந்த தோ்தலில் நான் நாடாளுமன்ற வேட்பாளா்களின் பிரசாரங்களை சற்று கூா்ந்து கவனித்தேன். அரசியல் கட்சிகள் தோ்தல் வாக்குறுதிகளை வெளியிடுவதுபோல், சில வேட்பாளா்கள் தனியாக தோ்தல் அறிக்கைகளை வெளியிட்டு இருந்தாா்கள். அவற்றில் சிலவற்றையும் நான் பாா்க்க நோ்ந்தது. அதில் அவா்கள் குறிப்பிட்டு சொல்லி இருந்தது சாலை வசதி, தெரு விளக்கு, குளங்கள் தூா்வாறல் கழிப்பறை வசதி செய்வது போன்றவற்றைக் குறிப்பிட்டு இருந்தாா்கள்.

இது போன்ற பிரச்னைகளை தீா்ப்பதற்கு ஏற்கெனவே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருக்கிறாா்கள். அதையும் தாண்டி சட்டப் பேரவை உறுப்பினா் இருக்கிறாா். இவற்றை நாடாளுமன்ற உறுப்பினா்கள் எப்படி தீா்க்க முடியும் என்று நான் யோசித்துப் பாா்த்தேன்.

This story is from the June 04, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 04, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை.. வெற்றிப் பாதையில் இஸ்ரேல்?
Dinamani Chennai

ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை.. வெற்றிப் பாதையில் இஸ்ரேல்?

ஐ.நா. பொதுச் சபையில் பெஞ்சமின் நெதன்யாகு இவ்வாறு சூளுரைத்த மறுநாளே ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரை அவரது ராணுவம் குறிவைத்துக் கொன்றிருக்கிறது.

time-read
2 mins  |
September 29, 2024
டெஸ்ட்: வரலாற்றுத் தோல்வியை நோக்கி நியூஸிலாந்து
Dinamani Chennai

டெஸ்ட்: வரலாற்றுத் தோல்வியை நோக்கி நியூஸிலாந்து

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் நியூசிலாந்து 'ஃபாலோ ஆன்' பெற்று விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 88 ரன்களுக்கே ஆட்டமிழந்த அந்த அணி, மோசமான டெஸ்ட் தோல்வியை எதிர்நோக்கி இருக்கிறது.

time-read
1 min  |
September 29, 2024
சபலென்கா, பாலினி முன்னேற்றம்
Dinamani Chennai

சபலென்கா, பாலினி முன்னேற்றம்

சீனா ஓபன் டென்னிஸ்போட்டியில் முன்னணி வீராங்கனைகள் அரினா சபலென்கா, ஜேஸ்மின் பாலினி ஆகியோர் 3ஆவது சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.

time-read
1 min  |
September 29, 2024
ஜம்மு-காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் இருவேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

time-read
1 min  |
September 29, 2024
அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ்
Dinamani Chennai

அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ்

‘காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிரிகள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

time-read
2 mins  |
September 29, 2024
பிகாரில் தொடரும் கனமழை: 13 லட்சம் பேர் பாதிப்பு
Dinamani Chennai

பிகாரில் தொடரும் கனமழை: 13 லட்சம் பேர் பாதிப்பு

பிகாரில் தொடரும் கனமழையால் வால்மீகிநகா் மற்றும் பிா்பூா் அணைகளில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டதால் மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 13.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

time-read
1 min  |
September 29, 2024
விவசாயிகள் நல ஆணையம்; ராணுவ தியாகிகளின் குடும்பத்துக்கு ரூ. 2 கோடி
Dinamani Chennai

விவசாயிகள் நல ஆணையம்; ராணுவ தியாகிகளின் குடும்பத்துக்கு ரூ. 2 கோடி

மாநிலத்தில் விவசாயிகள் நலனைக் காக்க ஆணையம், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 கோடி நிவாரண நிதி என்பன உள்ளிட்ட பல்வேறு கூடுதல் தேர்தல் வாக்குறுதிகளை ஹரியாணா மாநில காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்டது.

time-read
1 min  |
September 29, 2024
அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்
Dinamani Chennai

அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

இலங்கை கடற்படையினரால் 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

time-read
1 min  |
September 29, 2024
தரமற்ற 53 வகை மருந்துகளை தமிழகத்தில் பயன்படுத்துவதில்லை
Dinamani Chennai

தரமற்ற 53 வகை மருந்துகளை தமிழகத்தில் பயன்படுத்துவதில்லை

தேசிய மருந்து தரக் கட்டுப்பாட்டு மையம் தரமற்க அறிவித்துள்ள 53 வகையான மருந்துகளை தமிழகத்தில் பயன்படுத்துவதில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

time-read
1 min  |
September 29, 2024
தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மேம்படுத்த வேண்டும்
Dinamani Chennai

தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மேம்படுத்த வேண்டும்

தமிழ்நாட்டை இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலமாக மேம்படுத்த வேண்டும் என பனப்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 29, 2024