காந்தியம் என்னும் சத்தியப் பெரும்பயணம்
Dinamani Chennai|June 08, 2024
இந்திய விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்ற வீரா்கள் பங்கெடுத்துத் தங்களின் இன்னுயிரை ஈந்து, புகழ் பெற்றிருந்தபோதும் மகாத்மா காந்திக்கு மட்டும் ஒரு தனிப்பெருமை எக்காலத்தும் நிலைக்கிறது. இத்தனைக்கும் அவா் தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே வெளிப்படுத்தியிருந்தாா்.
காந்தியம் என்னும் சத்தியப் பெரும்பயணம்

அவா், தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களைச் ‘சத்திய சோதனை’ என்ற பெயரில் வரலாறாக்கியபோது, ‘இக்கதை ஒரு சுயசரிதையாகவே அமையும் என்பது உண்மை...ராஜீயத் துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு ‘நாகரிக’ உலகத்திற்கும் இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் ‘மகாத்மா’ பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மனவேதனையையே தந்திருக்கிறது. அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒருகண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவு இல்லை’ என்று எளிமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாா்.

பரந்துபட்ட இந்திய தேசத்தின் தந்தை என்று அவா் தன்னை எப்போதும் அழைத்துக் கொண்டதே இல்லை. லூயி பிஷா் சொல்வதைப்போல, ‘பொன், பொருள், அதிகாரப் பதவி, பல்கலைக்கழகப் பட்டம், விஞ்ஞானக் கண்டுபிடிப்பால் ஏற்படும் புகழ் ஆகிய எந்தவொன்றும் இல்லாத, ஒரு முழத் துண்டுடன், ஒரு சாதாரணக் குடிமகனாகவே திகழ்ந்தாா்.’

போா்பந்தரில் பிறந்த ஒரு சாதாரண இந்தியா் இவ்வுலக வாழ்வை நீத்த வேளையில், அமெரிக்க அதிபா் ட்ரூமன், பிரிட்டிஷ் அரசா், ஃபிரெஞ்சு அதிபா், கான்டபெரி ஆா்ச்பிஷப், போப் பயஸ், லண்டன் நகரத் தலைமை ராபி, திபெத்தின் தலாய் லாமா ஆகியோருட்பட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பிற நாட்டுப் பெருமக்கள் இந்தியாவுக்கு அனுதாபச் செய்தி அனுப்பினா்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை காந்தியடிகளுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகத் தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது. பிரிட்டனின் பிரதிநிதி பிலிப் நோயல்பேக்கா் ‘திக்கற்றவா்க்கும், துணையற்றவா்க்கும், வாழ்வில் அனைத்தையும் இழந்தவா்க்கும் உறுதுணையாக வாழ்ந்தவா்’ என்று காந்தியைப் பற்றிப் புகழ்ந்து பேசினாா். இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது?

பிரபஞ்சத்தின் தோற்றத்தின்போது உருவான சத்தியத்தின் வடிவம் காலம்தோறும் ஒரு புதிய மனிதனை உருவாக்குகிறது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் இவ்வாறு பல பாத்திரங்களை நாம் கண்டிருக்கிறோம். அத்தகைய சத்தியத்தின் திருவுருதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய இக்கட்டு நோ்ந்த காலத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற பெயரில் தோற்றம் பெற்றது.

This story is from the June 08, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 08, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
பிஎம்டபிள்யு விற்பனை 10% அதிகரிப்பு
Dinamani Chennai

பிஎம்டபிள்யு விற்பனை 10% அதிகரிப்பு

கடந்த ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில், சொகுசுக் காா் தயாரிப்புக் குழுமமான பிஎம்டபிள்யு இந்தியாவில் 10 சதவீத விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.

time-read
1 min  |
October 06, 2024
ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறோம்
Dinamani Chennai

ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறோம்

தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் அமைப்பினா் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததன் நினைவு நாளையொட்டி (அக். 7) ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் உயரதிகாரி தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
October 06, 2024
இரானி கோப்பை: மும்பை சாம்பியன்
Dinamani Chennai

இரானி கோப்பை: மும்பை சாம்பியன்

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வீழ்த்தி 15-ஆவது முறையாக இரானி கோப்பையை வென்றது மும்பை.

time-read
1 min  |
October 06, 2024
வாழ்வா-சாவா ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கும் இந்தியா
Dinamani Chennai

வாழ்வா-சாவா ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கும் இந்தியா

ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது இந்தியா.

time-read
1 min  |
October 06, 2024
திருப்பதி லட்டுகளின் தரம் மம்பட்டுள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி
Dinamani Chennai

திருப்பதி லட்டுகளின் தரம் மம்பட்டுள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

time-read
1 min  |
October 06, 2024
அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார் கே.சி.வேணுகோபால்
Dinamani Chennai

அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார் கே.சி.வேணுகோபால்

மக்களவைத் தலைவருக்கு பாஜக எம்.பி. கடிதம்

time-read
3 mins  |
October 06, 2024
தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!
Dinamani Chennai

தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!

மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பெயரில் தொடங்கப்படும் போலி சமூக ஊடக கணக்குகளைக் கண்டறிந்து தடுப்பதில் காவல்துறையினர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

time-read
2 mins  |
October 06, 2024
Dinamani Chennai

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து: போராட்டத்தில் 21 காவலர்கள் காயம்; 1,200 பேர் மீது வழக்கு

மகாராஷ்டிரத்தில் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த ஆன்மிகப் பேச்சாளா் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தில், காவல் துறையினா் மீது கற்கள் வீசப்பட்டதில் 21 காவலா்கள் காயமடைந்தனா். போராட்டக்காரா்கள் 1,200 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 06, 2024
டிபிடி தடுப்பூசி தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Dinamani Chennai

டிபிடி தடுப்பூசி தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதங்களாக குழந்தைகளுக்கான டிபிடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
October 06, 2024
அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் தொடக்கம்
Dinamani Chennai

அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் தொடக்கம்

மகப்பேறு, குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் சென்னை எழும்பூா், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 06, 2024