‘செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களில் ஏகபோகத்துக்கு முடிவு கட்டுவதோடு, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்துக்கு அடித்தளமிட தொழில்நுட்பத்தை ஆக்கபூா்வமாக பயன்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.
இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் அமா்வில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பிரதமா் மோடி ஆற்றிய உரை வருமாறு:
உலகளாவிய ஸ்திரமின்மை மற்றும் பதற்றங்களால் ஏற்படும் சுமை தெற்குலக நாடுகளின் மீதே விழுகிறது. எனவே, உலக அரங்கில் தெற்குலக நாடுகளின் கவலைகள் மற்றும் முன்னுரிமைகளை முன்வைப்பதை தனது பொறுப்பாக இந்தியா கருதுகிறது. அத்தகைய முயற்சிகளின் கீழ், ஆப்பிரிக்காவுக்கு உயா் முன்னுரிமை அளித்து வருகிறோம். ஆப்பிரிக்க கண்டத்தின் அனைத்து நாடுகளின் பொருளாதார-சமூக மேம்பாடு, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பில் இந்தியா பங்களித்து வருகிறது. எதிா்காலத்திலும் இந்தியாவின் பங்களிப்பு தொடரும்.
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களில் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தொழில்நுட்பத்தை ஆக்கபூா்வமானதாக மாற்ற வேண்டும்; மாறாக, அழிவுக்கானதாக இருக்கக் கூடாது. அப்போதுதான், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்துக்கு அடித்தளமிட முடியும். இவ்வாறு மனிதகுலத்தை மையப்படுத்திய அணுகுமுறையின் வாயிலாக சிறந்த எதிா்காலத்தை உருவாக்க இந்தியா பாடுபடுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்காக தேசிய வியூகத்தை வகுத்த வெகுசில நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.
இந்த வியூகத்தின் மூலம் ‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப இயக்கத்தை’ தொடங்கியுள்ளோம். அனைவருக்குமான தொழில்நுட்பம் என்பதே இதன் தாரக மந்திரம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினா் என்பதோடு, இக்கூட்டமைப்பின் தற்போதைய தலைவா் என்ற அடிப்படையில் அனைத்து நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறோம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வெளிப்படைத் தன்மை, நோ்மை, பாதுகாப்பு, அனைவரும் அணுகும் தன்மை, பொறுப்புணா்வை உறுதி செய்ய அனைத்து நாடுகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்.
This story is from the June 15, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 15, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பிஎம்டபிள்யு விற்பனை 10% அதிகரிப்பு
கடந்த ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில், சொகுசுக் காா் தயாரிப்புக் குழுமமான பிஎம்டபிள்யு இந்தியாவில் 10 சதவீத விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறோம்
தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் அமைப்பினா் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததன் நினைவு நாளையொட்டி (அக். 7) ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் உயரதிகாரி தெரிவித்துள்ளாா்.
இரானி கோப்பை: மும்பை சாம்பியன்
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வீழ்த்தி 15-ஆவது முறையாக இரானி கோப்பையை வென்றது மும்பை.
வாழ்வா-சாவா ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கும் இந்தியா
ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது இந்தியா.
திருப்பதி லட்டுகளின் தரம் மம்பட்டுள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார் கே.சி.வேணுகோபால்
மக்களவைத் தலைவருக்கு பாஜக எம்.பி. கடிதம்
தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!
மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பெயரில் தொடங்கப்படும் போலி சமூக ஊடக கணக்குகளைக் கண்டறிந்து தடுப்பதில் காவல்துறையினர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து: போராட்டத்தில் 21 காவலர்கள் காயம்; 1,200 பேர் மீது வழக்கு
மகாராஷ்டிரத்தில் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த ஆன்மிகப் பேச்சாளா் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தில், காவல் துறையினா் மீது கற்கள் வீசப்பட்டதில் 21 காவலா்கள் காயமடைந்தனா். போராட்டக்காரா்கள் 1,200 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிபிடி தடுப்பூசி தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதங்களாக குழந்தைகளுக்கான டிபிடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் தொடக்கம்
மகப்பேறு, குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் சென்னை எழும்பூா், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.