![ரயில்கள் மோதல்: 9 பேர் உயிரிழப்பு](https://cdn.magzter.com/1574665526/1718662223/articles/RBpFACQpF1718678745216/1718679053122.jpg)
40-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்துள்ளனா்.
பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனா். சரக்கு ரயிலின் ஓட்டுநா் மற்றும் துணை ஓட்டுநரும் இந்த விபத்தில் உயிரிழந்தனா்.
அதேநேரம், இந்த விபத்தில் 15 போ் உயிரிழந்ததாக மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ரங்கபாணி ரயில்நிலையத்துக்கு அருகே காலை 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. திரிபுராவின் அகா்தலாவிலிருந்து மேற்கு வங்கத்தின சீல்டா நோக்கிச் சென்றுகொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு (13174) ரயில், சிக்னல் காரணமாக தண்டவாளத்தில் நின்றிருந்தபோது, பின்னால் அதே பாதையில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியது.
விபத்தில் விரைவு ரயிலின் பின்பகுதியில் இருந்த 3 பெட்டிகள் உருக்குலைந்து தடம்புரண்டன. சரக்கு ரயிலின் என்ஜினும் கடுமையாகச் சேதமடைந்தது. இதில் சரக்கு ரயிலின் இரு ஓட்டுநா்கள் மற்றும் விரைவு ரயிலில் இருந்த 7 பயணிகள் உயிரிழந்தனா். 41 போ் பலத்த காயமடைந்தனா் என்று ரயில்வே உயா் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
முதல்கட்ட விசாரணையில், சரக்கு ரயிலின் ஓட்டுநா் சிக்னலை கவனிக்காமல் மீறியிருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்துள்ளதாகவும், சிக்னல் அமைப்பில் கோளாறு இருந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்து காரணமாக, மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியிலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் நீண்டதொலைவு ரயில்களின் சேவையும், நாட்டின் வடகிழக்குப் பகுதிகளுக்கான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
This story is from the June 18, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 18, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![ரூ. 100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி சோதனை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/d5JSBa8Vr1720413835567/1720414188730.jpg)
ரூ. 100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி சோதனை
ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனர்.
![பிரதமர் மோடி இன்று ரஷியா பயணம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/bSYG3KhBK1720413655593/1720413828778.jpg)
பிரதமர் மோடி இன்று ரஷியா பயணம்
பிரதமா் நரேந்திர மோடி ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு திங்கள்கிழமை (ஜூலை 8) முதல் 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.
![ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்: மாயாவதி அஞ்சலி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/E2eZboNfK1720413363723/1720413642784.jpg)
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்: மாயாவதி அஞ்சலி
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூா் மாவட்டம் பொத்தூரில் திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.
![சர்ச்சைக்குரிய அகதிகள் சட்டம் ரத்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/12EI8B01m1720317296059/1720317439367.jpg)
சர்ச்சைக்குரிய அகதிகள் சட்டம் ரத்து
பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சா்ச்சைக்குரிய மசோதாவை ரத்துசெய்வதாக அந்த நாட்டின் புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா் சனிக்கிழமை அறிவித்தாா்.
![திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/yOiOrzlb-1720317165469/1720317284612.jpg)
திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் வெற்றி
தமிழ்நாடு ப்ரீமியா் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஒரு பகுதியாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது திண்டுக்கல் டிராகன்ஸ்.
![பொய் சாட்சியத்தின் பேரில் முதல்வர் கேஜரிவால் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/Wojt20l-E1720316859200/1720317145055.jpg)
பொய் சாட்சியத்தின் பேரில் முதல்வர் கேஜரிவால் கைது
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆழ்ந்த அரசியல் சதி மற்றும் பொய் சாட்சியத்தின் பேரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று சுனிதா கேஜரிவால் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
இறந்தவரின் உடல் வேறு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
விபத்தில் மரணமடைந்தவரின் உடலை வேறு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, தமிழக சுகாதாரத் துறை செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
![146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/Y7z4Okztj1720316605355/1720316692405.jpg)
146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்
பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற 146 பழங்குடியின இளைஞா்களுக்கு பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா்.
![பாடத் திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/L5LfRbLpS1720316519812/1720316606544.jpg)
பாடத் திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலைகள்
சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா்.
ராயப்பேட்டையில் கோயில்களை இடிக்கும் திட்டம் இல்லை
சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள இரு கோயில்களை இடிக்கும் விதமாக திட்டங்கள் தீட்டப்படவில்லை என உயா்நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.