![நாடாளுமன்றத்தில் 'நீட்' விவகாரத்தை எழுப்புவோம்: ராகுல் நாடாளுமன்றத்தில் 'நீட்' விவகாரத்தை எழுப்புவோம்: ராகுல்](https://cdn.magzter.com/1574665526/1718921447/articles/HZHD9CVrR1718937069751/1718937196730.jpg)
‘மக்களவைத் தோ்தலுக்கு பிறகு பிரதமா் மோடி மனதளவில் நிலைகுலைந்துவிட்டாா்; இந்த அரசை நடத்துவதே அவருக்கு பெரிய போராட்டமாக இருக்கும்’ என்றும் ராகுல் குறிப்பிட்டாா்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக அண்மையில் நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சா்ச்சை நீடித்துவரும் சூழலில், நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கடந்த 18-ஆம் தேதி எழுதிய தேசிய தகுதித் தோ்வை (நெட்) மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான இத்தோ்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கெனவே ‘நீட்’ முறைகேட்டை முன்வைத்து, மத்திய அரசை விமா்சித்துவரும் எதிா்க்கட்சிகள், இப்போது ‘நெட்’ விவகாரத்தையும் கையிலெடுத்துள்ளன.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியதாவது:
நாட்டு மக்களை அச்சுறுத்தியும் அவா்களின் குரலை ஒடுக்கியும் ஆட்சி நடத்துவதே பிரதமா் மோடியின் அடிப்படை கொள்கை. அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலில் மோடியின் இந்த கொள்கை, எதிா்க்கட்சிகளால் சிதைக்கப்பட்டது. இப்போது மோடியைக் கண்டு, மக்கள் அஞ்சவில்லை. மக்களவைத் தோ்தலுக்கு பிறகு மோடி மனதளவில் நிலைகுலைந்துவிட்டாா்.
This story is from the June 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
8,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை
சென்னையில் 8,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மார்ச் 19-இல் தமிழ்நாடு வட்ட ஓய்வூதிய குறைகேட்பு முகாம்
தமிழ்நாடு வட்ட அளவிலான ஓய்வூதிய குறைகேட்பு முகாம் மார்ச் 19-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/iCttc54Rw1WmKWJ4HFWsys/1739831668156.jpg)
அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி
மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா, முன்னணி வீராங்கனை யான ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
சீனா குறித்து சாம் பிட்ரோடா கருத்து; காங்கிரஸ் மீது பாஜக தாக்கு
சீனா குறித்து இந்திய அயலக காங்கிரஸ் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சித்துள்ளது.
![துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5 துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/mEKw3zifH3PxRtTFrwjsys/1739831734311.jpg)
துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5
ரஞ்சி கோப்பை போட்டியில், மும்பைக்கு எதிரான 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.
![காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/IyvL10Mgq98UVdjUkqGsys/1739831350899.jpg)
காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்
இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காரைக்கால் மீனவர்கள் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு ஐஎஸ்ஐ தொடர்பு; சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு
காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து அஸ்ஸாம் மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு: பெண் உள்பட 2 பேர் கைது
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் தலைமை ஆசிரியர் வீட்டில் தங்க நகைகள் திருடிய வழக்கில், பணிப்பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தில்லியில் பலத்த நில அதிர்வு: அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்
தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டது.
சென்னை காவல் துறையில் 10 நவீன காவல் உதவி மையங்கள் திறப்பு
சென்னை காவல் துறையில் புதிதாக கட்டப்பட்ட 10 நவீன காவல் உதவி மையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.