அரசின் பொறுப்பு மும்மடங்கு அதிகரிப்பு
Dinamani Chennai|June 25, 2024
‘பாஜக தலைமையிலான அரசை தொடா்ந்து மூன்றாவது முறையாக மக்கள் தோ்ந்தெடுத்துள்ளதால், அதன் பொறுப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது; எனவே, முன்பை விட மூன்று மடங்கு மத்திய அரசு கடினமாக உழைத்து, மூன்று மடங்கு பலன்களை மக்களுக்கு அளிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா்.
அரசின் பொறுப்பு மும்மடங்கு அதிகரிப்பு

18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த பிரதமா் மோடி கூறியதாவது: சுதந்திரத்துக்குப் பிறகு புதிய நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெறுவது இதுவே முதல் முறை. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு பெருமைமிக்க, புகழ் மிக்க நாள்.

வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி: இந்தியாவின் சாமானிய மனிதனின் தீா்மானங்களை நிறைவேற்றுவதற்கான பாதையாக நாடாளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை அடைவதற்காக 18-வது மக்களவை தொடங்குகிறது.

பெரும்பான்மை, ஒருமித்த கருத்து: சுதந்திரத்துக்கு பிறகு, ஓா் அரசு தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை மக்கள் மீண்டும் வழங்கியுள்ளனா். தொடா்ந்து எங்கள் அரசைத் தோ்வு செய்த மக்களுக்கு நன்றி. அரசை நடத்துவதற்கு பெரும்பான்மை போதுமானது. நாட்டை வழி நடத்துவதற்கு ஒருமித்த கருத்து மிகவும் அவசியம். 18-வது மக்களவையில் இளம் மக்களவை உறுப்பினா்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

அவசர நிலை - கரும்புள்ளி: ஜூன் 25-ஆம் தேதி என்பது 1975-ஆம் ஆண்டு அவசரநிலை அமல்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டாகும். இது இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த ஒரு கரும்புள்ளியாகும். ஜனநாயகத்தை நசுக்கி, இந்திய அரசியல் சாசன சட்டம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, நாடே சிறைச்சாலையாக மாற்றப்பட்ட தினத்தை இந்தியாவின் புதிய தலைமுறையினா் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள். இந்தியாவின் ஜனநாயகம், ஜனநாயக மரபுகளைப் பாதுகாப்பதற்கு மக்கள் உறுதியேற்க வேண்டும்.

This story is from the June 25, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 25, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!
Dinamani Chennai

வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!

உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

time-read
1 min  |
July 08, 2024
கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா
Dinamani Chennai

கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா

பாகிஸ்தான் மிகவும் கடினமான, மோசமான சூழ்நிலைகளை எதிா்கொள்ளும்போதெல்லாம் உதவும் நாடாக சீனா இருந்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புகழாரம் சூட்டினாா்.

time-read
1 min  |
July 08, 2024
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்
Dinamani Chennai

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான விம்பிள்டனில், முன்னணி வீரா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றனா்.

time-read
1 min  |
July 08, 2024
பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்
Dinamani Chennai

பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்

மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் ராஜேஷ் ஷாவின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் உயிரிழந்தாா்.

time-read
1 min  |
July 08, 2024
நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் ஆசி
Dinamani Chennai

நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் ஆசி

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்த மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றாா்.

time-read
1 min  |
July 08, 2024
சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு
Dinamani Chennai

சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு

தமிழகத்திலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இளைஞா்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி சைபா் குற்றத்தில் ஈடுபட வைத்த வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
July 08, 2024
ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
Dinamani Chennai

ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்

ராகுல் காந்தி

time-read
1 min  |
July 08, 2024
Dinamani Chennai

போலி தங்கக் கட்டிகள் விற்பனை: 7 பேர் கைது

திருச்சி தனிப்படை போலீஸார் நடவடிக்கை

time-read
1 min  |
July 08, 2024
கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்
Dinamani Chennai

கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்

நாட்டிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று சிகிச்சை திட்டத்தை சென்னை கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
July 08, 2024
Dinamani Chennai

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு உடனடியாக அணுக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
July 08, 2024